அன்னையர் தின கவிதை
உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!
உனக்கென்ன தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!
உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!
நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!
உலகில் மலர்ந்த பூக்கள் எல்லாம்
உயிர் இழப்பது மாலையோ பூமாலையோ
உயிராய் பிறந்து அன்னையாய் மலர்ந்து
வாடாத பூவாய் என் அன்னையாய்
என் குல தெய்வமாய் நீயே ஆவாய்!
அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்..!
அன்னையர் தின கவிதை |
உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!
உனக்கென்ன தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!
உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!
நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!
உலகில் மலர்ந்த பூக்கள் எல்லாம்
உயிர் இழப்பது மாலையோ பூமாலையோ
உயிராய் பிறந்து அன்னையாய் மலர்ந்து
வாடாத பூவாய் என் அன்னையாய்
என் குல தெய்வமாய் நீயே ஆவாய்!
அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்..!