தேவதை - நீ பிரிந்த பின்னும் - காதல் கணக்குகள்

தேவதை

என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...

முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...

உங்களை தொட்டுப் பறிக்க...

தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...

அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

நீ பிரிந்த பின்னும்

நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

கவிதைகள்
வேண்டுமே
என் தனிமைக்கு

காதல் கணக்குகள்

லாபக் கணக்குகளை
போட்டு முடிப்பதற்குள்
நஷ்டம் வந்து விடுகிறது
காதலில்...

நேற்றைய அவளின் சிரிப்பை
முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன்
இன்று முறைத்து விட்டு
போகிறாள்..

சந்தோஷ கனவுகளை
கவிதை ஆக்குவதற்குள்
சோகத்தை என் முன்
கொட்டி விட்டு போய் விடுகிறாள் ...!!

கவிதை எனதில்லை

இருவருமே அறியாமல் இடம் மாறிய இதயம்
ஒருவருக்கும் தெரியாமல் உன் தெருவோடும் உள்ளம்
அருகிருக்கும் பொழுது அணைந்து போகும் மூளை
நம் காதல் ஒன்றே என் உயிர் அறிந்த உண்மை

உன் கைப்பையின் ஆழத்தில் மறைத்துக்கொள் என்னை
நிழலொளியின் மயக்கத்தில் அணைத்துக்கொள் நெஞ்சை
எழுத மையில்லை நீ இன்றி
கவிதை எனதில்லை உனதன்றி

காதல்

நான் இறப்பதையும்
நேசிப்பேன்..

அது உனக்காக‌
என்றால்..

படிக்காமல் போயிருப்பான்!

என்
கவிதைகள்
அழுகின்றனவே..

ஏன்?

அவன்

படிக்காமல்

போயிருப்பான்!

சமாதான புறாவாக நம் காதல்

எனக்காக நீயும் உனக்காக நானும்
விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
இன்னும் பிரியாமல் கூட வருகிறது
சமாதான புறாவாக நம் காதல்

நட்பு

நீ என்னிடம் பேசியதைவிட
எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன்
நம் நட்பை.

காதலின் ஒத்திகை

ஒத்திகை பார்த்தேனடி
இன்றாவது உன்னிடம் சொல்லிவிடலாம் என்று
உதிரவில்லையடி என் வார்த்தைகள்..உன் அருகே வந்தவுடன்!!

நிலையில்லாத வாழ்க்கையில்

நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும்
நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும் எங்கிருந்து
வந்தாய் நீ என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்

தவிப்பு

உன்னிடம் பேசும்போது மட்டும் தான்,

என் தமிழும் தலையில் தட்டுகிறது..

இன்றாவது திருந்த பேசு என்று ..!!

தோல்வி

எத்தனை முறை பார்த்தாலும் தோற்று போகிறேன்..

அவளின் ஒரே பார்வையில் ..!!

கண்ணீர்

கண்ணீரை ரசித்தேன்,

கன்னத்தில் ஆனந்தமாய் என்னோடு விளையாடியபோது..

அதே கண்ணீரை இன்று வெறுக்கிறேன்,

உன் கண்களில் பார்த்தபோது..!!

என்னுள்ளே நீ இருப்பதனால்

என்னை விட உன்னை நேசித்தேன்..

உன்னை விட இன்று என்னை நேசிக்கிறேன்..

என்னுள்ளே நீ இருப்பதனால்..!

புன்னகை

ஆயிரம் உறவுகள் என்னை சூழ்ந்திருந்த போதும்.,

உன் புன்னகைக்காக ஏங்கும் என் இதயத்தை பார்த்து,

ஏளனமாகவாவது சிரித்து விட்டு போ..

சமாதான புறாவாக நம் காதல்

எனக்காக நீயும் உனக்காக நானும்
விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
இன்னும் பிரியாமல் கூட வருகிறது
சமாதான புறாவாக நம் காதல்

இதயத்தழும்புகள்

உன் நினைவுகளே வேண்டாம் என்று

என் இதய சுவர்களில் மாட்டி இருந்த

உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன்...

ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது

உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக

அடிக்கப்பட்ட ஆணிகளின்

தழும்புகள்..

என் கவிதைகள் ..

எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!

நீ பார்த்தும் பாரமல்

நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்

நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள் - Dr. கலாம்

உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்..,

சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,

சிநேகா வந்தால் செத்து போவீர்கள்..,

அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,

ஆகையால் கனவு காணுங்கள்

காதலில் தவிக்கும் சந்தியாவை
பற்றி அல்ல...

கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவைப் பற்றி...

ஜெய்ஹிந்த்...

Post a Comment (0)
Previous Post Next Post