அழுகை - காதல் சேவை - அலுவலகம்

அழுகை

என்னை விட்டு போனாலும்
நீ அழுது கொண்டே போனதில்தான்
உணர்தேன் எனக்காகத்தான்
பிரிந்திருப்பாய் என்பதை

காதல் சேவை

நீ
பிரிந்தும் சேவை செய்கிறாய்
என் கவிதைகளால்
பல காதலர்களை
சேர்த்து வைக்கிறாயே

அலுவலகம்

காலையில் சந்தித்து
புன்னகையில் வணக்கம் சொல்லி
தோளுடன் தோள் உரசி
குதூகலமாய் குழம்பி அருந்தி
உரக்க நட்பு பேசி
பகலிலே பகிர்ந்துண்டு
வேலையில் ஒருங்கினைந்து
உயர்ந்திடுவோம் ஒற்றுமையாய்,
கூடு செல்லும் காகங்களாய் பிரிந்திடுவோம் மாலையிலே

தனித்தனியாய் தாய், தந்தை
கொஞ்சி குலவும் மனைவி மக்கள்
அவரவருக்காய் அண்ணன் , அக்கை
தங்களுக்காய் தம்பி, தங்கை
தம் வீட்டில் இருப்பினும்
நட்பென்னும் "ஓர் உறவு" குடும்பம் இது

உன் மடி வேண்டும்!

உன் மேலான என் காதல்
தோற்று போனாலும் உன்
மடியில் தூங்க வருவேன்

ஒரு முறை இடம் கொடுப்பாயா
சொர்க்கத்தில் தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும்

பெண்ணே

நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க

சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில்

உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில்


இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய்,
உன் கொப்பளிக்கும் புன்னகையால் ..

போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம்.


உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான்

அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் ..


ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து.

நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு..

தொடர முடியா கனவுகள்

மறக்கமுடியா நிகழ்வுகள்
முறிந்துபோன உறவுகள்
விடிய இயலா இரவுகள்
இவை தொடர முடியா கனவுகள்

மன்னிப்பது மனித இனம்
மறப்பது தெய்வ குணம்
மறக்க நான் கடவுளுமில்லை
மன்னிக்க இங்கு மனிதருமில்லை

மனிதம் மாண்டு ஆகிவிட்டது நூற்றாண்டு
சிறையில் கிடக்குது மனிதா உன் அன்பின்று
கண்களின் இமையாக மாறிவிட்ட பணம்
பணம் செதுக்கும் கற்சிலையாக இன்று உன் மனம்

மண் விழுந்த சிசுவிற்க்கும் பகைமை பார்க்கும் சொந்தம்
இதுதானா என் உயிராக நான் நினைத்த பந்தம்
கடல் தாண்டி வந்தேனே என் குலம் கூடி வாழ
நின்றேனே தனி மரமாய் இனி எந்த நாட்டை ஆள

பிடிக்காத காதலி

என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலியை பிறந்து
விட்டேன்

அடுத்த ஜென்மத்திலாவது நீ
விரும்பும் பெண்ணாக பிறக்க
வேண்டும் நான்!

காத்திருக்கிறேன்

என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!

சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!

காதல் - நட்பு - எழுத்து

எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு

கத்திசண்டை

ஏன் என் கண்களோடு இந்த கத்திசண்டை..

பின் என் கண் பட்டதால் தான் காயம் வந்தது என்று குறை சொல்வாய்..

நன்றாக பார் காயம் வந்ததா இல்லை

காதல் வந்ததா என்று..!!

மறந்து போன காதல்

ஞாபகப்படுத்திக் கொண்டே

இருக்க மறந்து போன

காதல் நம்முடையது

பூக்களின் கலவரம்

பூக்களுக்குள் நேற்று கலவரம்..

அவள் கூந்தலில் இரண்டு மலர்களுக்கு மேல் இடமில்லை என்றதால்..!!

உனக்காக காத்திருந்து

உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே

எங்கே நீ சென்றாலும்

எங்கே நீ சென்றாலும் உன்னோடு

ஓடிவரும் நிழலாக நானிருப்பேன்

என்பதை நம்பிவிடு

கவிதையாகிய அவள் விழி..

கவிதை கண்டேன் உன் கருவிழியில்,

இனி கலங்காதே..நீ கலங்கினால்..

கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!

எங்கே நீ… என் காதலா

என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலன்
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அதற்காகவாவது உன்னைக்
காதலிக்க வேண்டும்
எங்கே நீ…

தன்னம்பிக்கை

பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம்..
நீ தானேயடா,
ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று...!!

என் வீட்டு மலர்கள்

மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல்..
நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு
அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது..!!

உனக்காவே பிறந்த நான்

உனக்காவே
பிறந்த நான்
இறைவனிடம்
வரம் கேட்டால்

உன்னோடு வாழ்ந்து
உன்னில் இறந்துபோக
வேண்டுமெனக் கேட்பேன்

அன்றில் பறவை

அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன்..
வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள்,
அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன..!!

Post a Comment (0)
Previous Post Next Post