இதுதான் வாழ்க்கை - அடிமை - ஆசை படுகின்றன

இதுதான் வாழ்க்கை

எனக்கும் உன்னை பிடிக்கும்
உனக்கும் என்னை பிடிக்கும்
பிடிச்சிருக்கு என்று –நீ
சொன்னாய் –நான்
எனக்கும் தான் என்று –ஆனால்
என் சோகவும் சொன்னேன்........

கடந்துபோனது பொம்மை
வாழ்க்கை –அதை
மறந்துவிடு என்றாய்-நானும்
பொம்மையாய் தலையசத்தேன்.........

பொழுதுகள் எல்லாம் –எனக்கும்
உனக்கும் கைபேசியில் ஆகிப்போனது
பேசிப்பேசி அது காதலாய் –நமக்குள்
பூ பூத்தது.........

காதலில் நீ முதல் அடியெடுத்து
நடந்தாய் –நான்
நடக்கத்தொடங்கினேன்.........

காதல் வானில் –நீ
சிறகுவித்தாய் –நான்
காதலின் தத்துவம் கண்டுகொண்டேன்......

உன் கண்களில் அடிக்கடி –கண்ணீர்
அது கவலையின் உப்பு
கண்ணீர் இல்லை –ஆனந்தந்தின்
உச்ச கண்ணீர்..............ஆனந்த கண்ணீர்

இதுதான் வாழ்க்கை –என்று
நீ எனக்கு புரியவைத்தாய்-நான்
புரிந்துகொண்டேன் காதலை..........................!!!!

அடிமை

உன் அன்புக்கு நான் அடிமை

உன் பண்புக்கு நான் அடிமை

உன் பாசத்திற்கும் நான் அடிமை

உன் நேசத்திற்கும் தான் நான் அடிமை


என் இதயத்தில் நீ குடி இருக்க

நான் உனக்கு அடிமை ஆனேன்..

உன் இதயத்தில் நான் குடி இருக்க

நீ எதற்கெல்லாம் அடிமை ஆனாய்

சொல் அன்பே....!!!

ஆசை படுகின்றன

உன்னை காண என் இரு விழிகளும்..,

உன் வார்த்தைகளை கேட்க என் இரு செவிகளும்..,


உன்னை கட்டி அணைக்க என் இரு கைகளும்..,

உன்னுடன் சேர்ந்து நடக்க என் இரு கால்களும்..,

உன்னையே எண்ணி துடிக்கிற என் ஒரே ஒரு இருதயமும்..,

ஏங்குகின்றன..!துடிக்கின்றன..!ஆசை படுகின்றன..!

உன்னை மட்டும் தந்து விடு எனக்கு

எங்கே இருக்கிறாய்
நீ..????

காணும் இடங்களில்
எல்லாம் உன் முகம்
மின்னலாய் வந்து
மறையும் மாயம் என்ன??


என் வீட்டைக் கடந்து
போகும் வாகனத்தின்
ஒளியைக் கேட்டு
ஓடி வந்து பார்த்து
ஏமாற்றம்...


மரக்கிளையில்
கொஞ்சி மகிழும்
பறவைகள்...
என் மனம்
பொறாமையில் தவிக்க..
சொல்ல முடியா வகையில்...
கோபம் உன் மேல்...


வேண்டாம் என்றேன்
என்னுள் வந்தாய்
வேண்டி நிற்கிறேன்
என் கண்ணை விட்டு
எங்கே மறந்தாய்...


கண்களை மூடினால்
ஒரு இருட்டு...
இருட்டினில் ஒளியாய்
உன் முகம்...

உன் முகம் பார்த்தே
தூங்கி கொண்டு இருக்கிறேன்

விடியல் பிடிக்கவில்லை..

உன்னை கண்ணில் இருந்து
விரட்டும் இவ்விடியல்
எனக்கு மட்டும் வேண்டாம்...

உனக்காக காத்திருக்கிறேன்..

உன் உயிரை கொண்டு
உன்னோடு வாழும்
வரம் வேண்டும்..


என் உயிரை தருகிறேன்...
உன்னோடு வாழ...
உன்னை மட்டும்
தந்து விடு எனக்கு...

என் ஆசைகள் எல்லாம் நீயாக ஆசை

கவிதைகள் பாட ஆசை
கவலைகள் மறக்க ஆசை
உன் நிணைவுகளில் வாழ ஆசை.......

நிணைத்ததும் மரணிக்க ஆசை
உலகத்தை ஆழ ஆசை
உன் கண்களை படிக்க ஆசை...........

சின்னச் சின்ன கனவுகான ஆசை
உன் உருவம் சிற்பமாக்க ஆசை
சிலநேரம் உன்னோடு சண்டை போட ஆசை.........

சிறகுகொண்டு பறக்க ஆசை....
நான் பறக்கும் தேசம் எல்லாம் நீயாக ஆசை......
என் கனவுகள் எல்லாம் நீயாக ஆசை..........

என் உறவுகள் எல்லாம் நீயாக ஆசை
எனக்கு புரியும் மொழி மட்டும் நீ பேச ஆசை......
என் ஆசைகள் எல்லாம் நீயாக ஆசை,,,,,,,,,,,,,!!!!

உன்னை எண்ணி உயிர் வாழ்கிறேன்

உன்னை எண்ணி உயிர் வாழ்கிறேன்..
உன் பெயர் தெரியாமல் தடுமாறுக்கிறேன்..
உன்னை கண்டவுடன் மறுபுறம் திரும்புகின்றேன்..
என் காதலை சொல்லாமல் தவிக்கிறேன்..
என் காதலை சொல்ல தூதாக
நிலவை அனுப்ப நினைத்தேன்..
அன்றோ அமாவாசை....!
பூவை வருடும் தென்றலை அனுப்ப நினைத்தேன்..
நான் இருப்பதோ பாலை வனத்தில்..

கண்கள். இதயம்

காதலிப்பது கண்கள் மட்டும் அல்ல.
இதயமும்தான்...!
கண்கள் உன் முகத்தை தேடி...!
இதயம் உன் அன்பை தேடி...!

உன்னை மட்டுந்தான்

கவிதைகள் -என்று
சொல்லிப்பார்த்தேன் -அது
எல்லாம் நீதான் -என்று
ரீங்காரமிட்டது........மூளை

காதல் என்று எண்ணிப்பாத்தேன்
அது உன் கண்கள் -என்று
என் மனது தந்தியடித்தது.........

பூக்கள் என்று -நான்
சொல்லிப்பார்த்தேன் -அது
உன் புன்னகை என்று
தென்றல் சொல்லிபோனது.........

அழகு என்று சிந்தித்தேன்
அது நீதான் என்று -என்
கண்கள் சிமிட்டிச்சொன்னது.........

மொத்ததில் என் பேனாவும்-என்
கவிதையும் சொல்வது-உன்னை
மட்டுந்தான் -என்று
நான் சொல்வது தப்பில்லை.........

உன் கண்கள் பேசும் மொழி

உன் கண்கள் பேசும் மொழி....
ஒரு சமயம் நீ என்னை பார்க்கும் பொழுது...
என் மனதில் ஒரு தனி சுகம்..
அது........
என்னை அறியாமல் நான் விண்ணில் பறக்கும் சுகம்...
மறுமுறை நீ என்னை பார்க்காத சமயம்...
உன்னையே பார்த்து கொண்டு...
நீ பார்க்கும் நேரம் வரை தவிக்கும்.
என் விழிகள்.........

என் இதய மேடை

என் இதய மேடையில்
நாடகம்
நடத்த வந்தவர்கள்
பலர்
ஆனால் என் இதயம்
உன்னில் தானே
காதல் கொண்டது

காதல் மனு

இரவுத் தூக்கமிழந்து

இதயத்தில் நிம்மதியிழந்து

எதையோ.!

இழந்தவன் போல்

ஏங்குகிறேன்.....

அவள் காதல் மனுவிற்காய் ............

நீயும் என்னை நேசித்தாயா?

என்னைப் புரியும்
நிலையில் எப்போதும்
நீ இருந்ததில்லை
நீ என்னைப் பிரியும்
நிலைக்கு இதுவும்
ஓர் காரணம்
முன்கூட்டியே
எழுதப்பட்ட
உன் தீர்ப்பால்
விசாரணையின்றி
தண்டிக்கப்பட்டேன்
என்னை
விட்டு விலகி
வெகுதூரம்
சென்று விட்டாய்
பழகி விடும் உனக்கு
என் நினைவின்றியும் ஜீவிக்க
இப்போதேனும்
சொல்லி விட்டுப் போ
நீயும் என்னை நேசித்தாயா?

கனவாய் இருந்தது!

என் அறையின் கதவு
தட்டப்படும் சமயங்களில்
ஆவலுடன் திறந்து பார்ப்பேன்
அவள் வருவாளா என்று.....

அன்றும் அப்படித்தான்
''டக்'' ''டக்'' என்ற சத்தம்
ஆவலுடன் திறந்து பார்த்தேன் - கதவை
என்ன ஆச்சர்யம்!
அவளேதான்! நின்று கொண்டிருந்தாள் நாணலுடன்

கதவை அகலமாய் திறந்தேன்
அவள் அறைக்கு உள்ளே வந்தாள்
அமைதியாய் அமர்ந்தாள்
நீண்ட நேரம் பேசினோம்.....

திடீரென்று முத்தம் தந்தேன் - அவள் செவ்விதழில்
அவள் மறுக்கவில்லை
கண் மூடினால் வெட்கத்தில்
கண் விழித்தேன் நான்
கனவாய் இருந்தது!

என்றும் நிலைத்திருக்கிறது

உன்னை
மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி
ஓடிக்கொண்டே இருகிறேன்
நான் ஓடும்போதெல்லாம்
என் நிழலாக
உன் நினைவுகளே
என்னை
துரத்திக்கொண்டு வருகிறது
எங்கும் நிறைந்திருக்கும்
வானம் போல்
உன் நினைவுகளே
என் மனவானில்
என்றும் நிலைத்திருக்கிறது

என் இதயம் உன்னிடத்தில் தஞ்சமாய் இருப்பதால்

உனக்காக இதயத்தையும்
விழிகளையும் வானையும்
தென்றலையும் நிலவையும்
பறவைகளையும் பூக்களையும்
தூதுவிட்டேன்
என் காதலை
உனக்கு உணர்த்த சொல்லி


பூவானது வாடி வந்து சொன்னது
நீ மறுத்து விட்டாய் என்று
கலங்கி போய் வந்தன கண்கள்
உணர்ந்துகொண்டேன்


வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்


எனக்கு காரணம்
சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி
சென்றுவிட்டது

பறவையோ சோகமாய் வந்தது

இதயம் மட்டும் தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது


ஒரு வேளை
என் இதயத்தை
மட்டும் வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ


இதே நினைவில் வாழ்கிறேன்
நான்...
என் இதயம் உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்.....

இணைந்தே இருப்பேன் இறப்பிலுமே

உடலுக்குத்தான் வயதே தவிர

உள்ளத்துக்கு ஏது வயது ???

உள்ளத்தை விரும்பியவனுக்கு

உடலைப்பற்றி என்ன கவலை

என்றும் இருப்பேன் நீ இருக்கும் வரை

இணைந்தே இருப்பேன் இறப்பிலுமே...

என்ன பொருத்தம்

ஆசையாக காத்திருந்தேன் உங்களுக்காக..

நீங்களும் வந்தீர்கள்...ஆனால் தாமதமாக..

காரணம் கேட்காமல் கோவப்பட்டேன்

காரணம் அறிந்ததும் சந்தோஷத்தில்

நான் நானாக இல்லை..

இதெல்லாம் எனக்காகவா???

என்று கேட்டேன்..

இதெல்லாம் உனக்காக இல்லை..

உனக்காக "மட்டும்" என்று சொன்னதும்..

நான் என்னையே மறந்தேன்..

கோபமே வராத உங்களுக்கும்..

உங்கள் மேல் அதிக கோவப்படும்..

எனக்கும் என்ன பொருத்தம்????:

சொல்லுங்க????

என் காதல்

நட்சத்திரங்களோடு
கைகோர்த்து
முப்பத்து முக்கோடி
தேவர்கள் மற்றும் தேவதைகள்
சுகந்தம் பாட....
நகரும் நிமிடங்களோடு
கைகோர்த்து
பூக்களும் தோரணங்களும்
கவிதை பாட..
இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..
இனி வரப்போவதில்லை
எனத் தெரிந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்........

நேசித்தேன்

தென்றலை நேசித்தேன்
புயல் வரும் வரை...!
பூக்களை நேசித்தேன்
வாடும் வரை...!
நிலவை நேசித்தேன்
விடியும் வரை...!
உன்னை நேசித்தேன்
என் உயிர் போகும் வரை...!

உண்மை சொல்ல கண்கள்...!

உண்மை சொல்ல கண்கள்...!
பொய் சொல்ல பெண்கள்...!
அதை நம்ப ஆண்கள்...!
உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்...!
பொய் சொன்ன பெண்கள் மணவறையில்...!
நம்பிய ஆண்கள் கல்லறையில்...!

Post a Comment (0)
Previous Post Next Post