காதலில் விழுந்தேன் | Kaathalil vilunthen

காதலில் விழுந்தேன் | Kaathalil vilunthen
Kaathal
Kaathalil vilunthen

காட்சி கண்ட விழிகள் 
கவிதை சொல்லும் !
கவிஞனாய் நீ இல்லாவிட்டாலும்!

மௌனம் தாங்கும் பூக்கள் 
மெல்லிசை பாடும்!
மெட்டுக்கள் இல்லா பொழுதும்!

மலராத ரோஜா மொட்டும் 
மலர்ந்து விடும்!
மலர்வது நாளையென அறிந்தும்!

தவமிருக்கும் சாலையோர மரங்களும் 
தவழ்ந்து உன்னைத்தொடும்!
தவழ முடியாதென்று தெரிந்தும்!

தேவதை அவள் கடந்து செல்ல 
தேகங்கள் மெய் சிலிர்க்க 
நான் மட்டும் என்ன விதிவிலக்கு?

காதலில் விழுந்தேன்!





Post a Comment (0)
Previous Post Next Post