மனக் கதவு | manak kathavu

மனக் கதவு | manak kathavu
mana kathavu kavithai
Manak kathavu


தவற விட்ட கடந்த வாழ்க்கையை 
விரல் நுனி கொண்டா தேடுவேன் 
எங்கோ கதவுகள் தாழிடப்பட்டு
எதிர் முனையில் தேடுகிறேன்!

விதை இல்லா வேர் ஏதும் இல்லா
நட்சத்திரம் பூவாய் தெரியுது
என்னோடு நித்தமும் பயணித்த 
வாழ்க்கை மட்டும் தெரியவில்லை!

என் சுவாசக் குழல் புகுந்த காற்றை
அறிவியல் செய்து கூட  அறிந்திடுவேன்
ஆறறிவு கொண்டு அறிய முடியாததை 
எவ்வறிவு கொண்டு அறிந்து கொள்வேன்!

எதிர் காலத்தை கனவுகள் சொல்லுது
கடந்த காலம் சொல்ல களைப்பாகுது
விழி மூடி தூங்கினால்தானே 
கனவுகளும் ஏதேனும் வழி சொல்லும்!

காற்றோடு காற்றாய் கலந்தாலும் 
சல்லடை இட்டு பிரித்திடுவேன்
காயங்களோடு மீட்டு விட்டாலும் 
கண்ணீர் கொண்டு மருந்து இட்டுடுவேன்!

கடந்த வாழ்க்கை தவறவில்லை 
களைப்போடு தேட வேண்டாம் 
கவலை களைந்து விட்டு திறக்கலாம்
கதவுகள் இது மனக் கதவுகளே!






Post a Comment (0)
Previous Post Next Post