என்ன காரணம் ? (தமிழ் கவிதை) -what-is-a-reason
என்ன காரணம் ?
உன் நினைவு
கொடுக்கும் வலி
கூட எனக்கு சுகமாக ஏன்
இருக்கிறது !
புரியவில்லை நான்
ஏன் வருத்தம் கொள்ளவில்லை !
என்னுள் ஏதும் பிழையா ?
உன் நினைவுகள்
மட்டுமே நான்
மகிழ காரணம் !
ஏதோ ஒரு
குழப்பம் உள்ளது அந்த
மகிழ்வின்
இறுதியில் கண்கள்
மட்டும் கண்ணீர் சிந்துகின்றன !