தந்தையர் தினம்

தந்தையர் தினம்
Fathers day
Fathers day Kavithai

உள்ளங்கை ரேகையில்
உலவிக் கொண்டிருக்கிறது
உற்சாகமாய் நீங்கள் 
கை பிடித்து நடை பழக்கியது!

பள்ளி செல்லும் 
காலை வேளையிலும் 
திரும்பி வரும்
மாலை வேளையிலும்
தோள் கொடுத்து சுமந்தாய்!
தோழனாய் வாழ்க்கையில்
தோள் கொடுத்து உயர்த்தினாய்!

பள்ளி கல்லுரி என்று பல 
பாரங்களை நான் கொடுக்க 
பாசத்தோடு சுமந்து கொண்டாய்!

வாழ்க்கை எனும் மலையின் 
அடிவாரமாக நீங்கள் இருக்க 
உச்சி முகடுகளில் இருந்து 
உரக்க முழங்குகிறேன்!

உயர்ந்தது உங்களால்தான்!

உதிக்கத் தெரிந்து 
மறையத் தெரியாத 
சூரியனாய் நீங்கள் இருக்க 
உங்கள் ஒளிக்கதிர் பெற்று 
உயிர் வாழ்கிறது என் 
உயிர் வார்த்தைகள்!

தந்தை சொல்மிக்க 
மந்திரம் இல்லை!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!






Post a Comment (0)
Previous Post Next Post