மௌனமே வாழ்க்கையாய - மூட நம்பிக்கை - காதல் செய்யுங்கள்

மௌனமே வாழ்க்கையாய

தினம்தோறும் இருவரும்
திரும்பிப் பார்த்தும்
அறிமுகம் இல்லாதவராய்
வழி செல்லும் பயணம்

இதயம் மேடையிட்ட
காதல் கச்சேரிக்கு
சரிகமபதநி கூட
சரியாக உச்சரிக்கபடவில்லை

பூக்காத மொட்டுக்கு
கூந்தல் ஏற ஆசை
போகாத ஊருக்கு
வழித் தேடி தவிப்பு

சந்து முடுக்குகளில்
சங்கமித்த நம் காதல்
சமுத்திரமாய் விரிவதற்குள்
வற்றிய நீர் குளமாய்

அழகான குழந்தைக்கு
ஊனமாய் ஒரு கால்
ரசம் சொட்டும் கவியில்
நெருடலாய் சில பிழைகள்

முற்று பெறாத
முதல் வார்த்தைக்கு
அர்த்தம் மட்டும்
எப்படி கிடைக்கும்

ஓடாத கடிகாரத்தில்
மணிபார்த்த கதையாய்
உலா வந்த நம் காதல்
கல்லடிபட்ட கண்ணாடியாய்

விரிசலுக்குள் மறைந்த
என் காதல் பிம்பத்தை
விழிப் போட்டு தேடுகிறேன்
எட்டிய தூரத்தில் நீ இருந்தும்

மூட நம்பிக்கை

கழுதை கத்துதல் சுபம்
விதவை எதிர்வந்தால் பாவம்
மொட்டையடித்தால் முக்தி
உள்ளங்கை அரித்தால் வருவாய்
காலையில் கண்ட கனவு பலிக்கும்

இறுதியாக
மந்திரியிடம் மனு

காதல் செய்யுங்கள்

உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம்
ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களை
மட்டும் நேசிக்க யோசிக்கிறோம்
ஆகையால் ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள்

சோ லவ் ஈச் அதர்

என்ன மந்திரம் செய்தாய்

உன்னைவிட
அழகான பெண்கள்
எல்லாம் என்னைக்
கடந்து போகிறார்கள்...
உன்னைவிட
அக்கறையோடும் சிலர்
என்னை
நேசிக்கிறார்கள்...
இருந்தும்
உன்னை மட்டுமே
நினைக்கும்படியாய்
என்ன
செய்தாய் என்னை?

எது சரி? எது தவறு?

எதுவுமே தெரியாமல்
உன்னை காதலித்தேன்

எல்லாம்
தெரிந்த பின்பு
உன்னை
நான் பிரிந்தேன்

எது தவறு?
எது சரி?

பிரிந்தோமா...?

பிரிதல் எப்படிச்
சாத்தியம்?
உன்னில் இன்னும் நான் இருக்கையில்...

உதடுகள் மாறுகின்ற
உண்மையை
கண்ணாடியில் முகம் பார்த்து
கண்களிடம் கேள்.

கோபத்தில் நீ எறிந்த
வார்த்தைகளைக் கனல்துளிகளைக்
குவித்து வைத்திருக்கிறேன்
குளிர் காய்வதற்கு

நீ தந்த காயங்களை கூட
ஆறுவதற்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று

உன் நினைவுகளை
எரித்த சாம்பலிலும்
பீனிக்ஸ் பறவையாய்
நீயேதான் எழுகிறாய்

பிறகெப்படி நாம்
பிரிந்தோம் என்கிறாய்...?

வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ! (சுப்பிரமணிய பாரதி - Vaarthai Thavarivittaai)

.....வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!....


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!

(தீர்த்தக் கரையினிலே...)

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ?

(தீர்த்தக் கரையினிலே...)

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

(தீர்த்தக் கரையினிலே...)

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி!

தீர்த்தக் கரையினிலே...
(கண்ணம்மா - என் காதலி)
மகாகவி சுப்பிரமணிய பாரதி

English Stub:
theerththak karaiyinilae therku moolaiyil shenbagath thoattaththilae
paarththirundhaal varuvaen vennilaavilae paanigiyoadenru sonnaay
vaarththai thavarivittaai adi kannammaa maarbu thudikkudhadi
paarththa idaththilellaam unnaip poalavae paavai theriyudhadi
paavai theriyudhadi

(theerththak)

maeni kodhikkudhadi thalai sutriyae vaedhanai seygudhadi
vaanin idaththaiyellaam indha vennilaa vandhu thazhuvudhu paar
moanaththirukkudhadi indha vaiyagam moozhgith thuyilinilae
naanoruvan mattilum pirivenbadhoar naragath thuzhaluvadhoa (2)

வறுமைத் தாய்

தன் ஏழை மகள்
பெரியவள் ஆனதால்
தாயும் தாவணிக்கு மாறினாள்

பிழை

ஆமாம்! பிழைப் பெயர்பலகையில் !!
(அ)நியாயவிலைக்கடை!!!

இதயம்

உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏன் என்றால்
நீ துடித்து நான் உயிர் வாழ விரும்ப வில்லை

காத்திருக்கிறேன்..

ஓய்ந்தது
மழை
மட்டுமல்ல
நம் கூடலும் தான்!!!
மீண்டும்
வானம் பார்த்த பூமியாய்
காத்திருக்கிறேன்...

முரண்பாடு

வீட்டில் ஒட்டடை
கவலைப்பட்டேன்
ஓட்டடைதான் வீடு
சிலந்தி சந்தோசப்பட்டது

குழந்தைகள் தினம்

நேரு பெருமானே!
குழந்தைகள் தினம்
கொண்டாட வேண்டும்

கூப்பிடுங்கள்
குழந்தைகளை

அங்கங்கே தேசமெங்கும்
இரும்படிக்கும் ரோஜாக்களை

தாய்ப்பாலுக்கு சம்பளம் கட்டச்
சம்பாதிக்கும் சிசுக்களை

இருக்கிறார்கள்....

சிவகாசியின்
வெடிமருந்து கிடங்குகளில்

காஷ்மிரின்
கம்பளைக் கிடங்குகளில்

மேற்கு வங்கத்தின்
செங்கற் சூளைகளில்

சூரத்தின்
வைரத் தொழிற்சாலைகளில்

டெல்லியின்
சாலையோர டீகடைகளில்

பெரோசாபாதின்
வளையல் கூடங்களில்

அலிகாரின்
பூட்டுத் தொழிற்சாலைகளில்

கூப்பிடுங்கள்
நேருஜி

அந்தக்
கொழுந்துகள் இல்லாமல்
குழந்தைகள் தினம்
கொண்டாடினால்

சட்டையில் நானும்
கட்டாயம் அணிவேன்

ஒரு
கருப்பு ரோஜா!!!

மழை


இது வானத்தின் இசை
கருப்பு காகிதத்தின் வெள்ளை பாடல்
தூய்மையின் திறப்பு விழா
இறைவனின் திரவ நிலை

என் மேல் விழுவது பாரதியின் பார்வைகளா?
இல்லை விழுவதென்ன கண்ணாடித் தமிழா?
கவிதைகளாய் சிதறுகிறதே!

இது காகிதங்கள் கப்பலாகும் நேரம்
குடைகள் மலரும் நேரம்
வெள்ளை நிறம் வர்ணங்களாகும் நேரம்

நான் கவிதையாகும் நேரம் .

என்னை எதுவுமற்றவனாக்கி
எல்லாவற்றையும் என்னுள் நிரப்பும்
மாயப் பெண்ணா?
இல்லை என் முகாரி ராகத்தை
உடைக்க வந்த காதலா?
இது எனக்காக வானம் செய்யும்
ஆனந்தப் பிரகடனம்.

நனையவே விருப்பப்பட்டேன்
கரைந்தே போனேன்
இன்னும் யாருக்கும் தெரியாது ....
உன்னோடு கரைந்து போன என்
கண்ணீர் துளிகளின் அர்த்தங்களை..

ஏய் மழையே!
நான் உன்னை உணரும் போது
என்னையும்
என் கண்ணனையும்
நான் உணர்வேன்.

ஏதோவொன்று

சில நாட்களாகவே
நம் விடைபெறுதல் முழுமையாக இல்லை ,

ஏதோவொன்று நிகழ்வதேயில்லை .

இறுதியாக
நாம் விடைபெற்ற போதும்
நீயோ
அல்லது
நானோ
அதைச் செய்யவில்லை .

கவிதை

இறுதியாக ஏதாவது எழுதிவிட்டு
இன்றோடு
எழுதுவதை நிறுத்தி கொள்ளலாம் - என
முடிவு செய்து
வெகு நாட்களாகிவிட்டன .
இன்னும்
அந்த காகிதம் வெள்ளையாகவே இருக்கிறது .

நீ

உன் காதோர கூந்தலை
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்

அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .

புரியவில்லை

ஒரு முறை
எனை பார்த்தும்
வாசலிலேயே அமர்ந்திருக்கிறாய் .

ஒரு முறை
எனை பார்த்ததும்
எழுந்து உள்ளே சென்றுவிடுகிறாய் .

நான் புரியாமல்
தவித்து கொண்டிருக்கிறேன் .

இவற்றில் எதை
என் காதலோடு சம்பந்தபடுத்திகொள்ளட்டும் .

இது உனக்காக

1)
பிறப்பு எப்படி என்பதை நான் பிறந்து உனர்ந்தேன்
இறப்பு எப்படி என்பதை உனர்கிறேன் உன் பார்வையில்

2)
உன் நினைவு இல்லாத நாள் என் நினைவு நாள்

3)
அவள் என்னை நினைக்கவெ யொசிக்கிராள்
ஆனால் நான் அவளை நினைக்கவெ சுவாசிக்கிறேன்.

ஒரே பார்வையில் காதலா?? சாத்தியமா??

என் ஆயுள் முழுவதும்
உன் அன்பு வேண்டும்
இல்லையேல்
உன் அன்பு உள்ள வரை
எனக்கு ஆயுள் போதும்!!

Post a Comment (0)
Previous Post Next Post