முதிர்கன்னி - முப்பதை தாண்டியும் முகராத மலர்

முப்பதை தாாண்டியும் 
முகராத மலர்!

மாங்கல்யமெனும்
மங்கள நாண் பூட்டி
மாலைச்சூடும் மணாளனின் 
வரதட்சணை வியபாரத்தாலும்!

தேனிருந்தும் வண்டு !!!
மொய்க்காத மலராய்!!!

ஜோதிடர்களின் வருமானத்திற்க்கு வழி வகுக்கும்
நவகோள் நாயகர்களாலும்!!

மன்றம் கூடி வாழ்த்து ஒலிக்காமல்!!
ஊர் கூடி வசை பாட!!!

மையிட்ட கண்ணில்  விழுந்த 
கார்மேகம்!!!
கன்னங்களில் உருண்டு...
காற்றோடு கலந்து...
கடல் உப்பாய் மாறி...
கனத்த நெஞ்சுடன்...
தனிமையின் கரம் பற்றி...
அக்னி வலம் வருகிறாள்!!!
முதிர்கன்னியாக...



Post a Comment (0)
Previous Post Next Post