பாதங்களின் சுவடுகள் - நினைவுகளின் நிழல்களாய்...

உயிர்களின் உருவமாய்...
நினைவுகளின் நிழல்களாய்...
உணர்வுகளின்  ஊற்றாய்...
கண்ணீரின் கணமாய்...
காலத்தின் சுவடாய்...
நிகழ்வுகளின் குறியீடாய்...

அடிமனதின்!!
ஒற்றை சாளரத்தில்...
ஏதோ ஒன்று...
உணர்த்தி செல்ல...

உண்மை உணர்ந்து...
திரும்ப எத்தனிக்கையில்...
சடலங்களின் பூக்களாய்...
மிதிப்பட்டு ஒளிக்கிறது!!

மீள இயலா...
துயரில்...
வாடைக் காற்றின்...
குளிரென...

மனதை வருடிய...
உறவுகளின் உறைவிடமான...
உணர்வின் நிழலை...
ஏதோ ஒன்று...
கிழித்துக்கொண்டிருக்கிறது!! 


Post a Comment (0)
Previous Post Next Post