சுதந்திர தினக் கவிதை | Suthanthira thina kavithai

சுதந்திர தினக் கவிதை | Suthanthira thina kavithai
Augut
Suthanthira thinam

சுதந்திரம் பற்றிய இன்னும் ஓர் கவிதை , இங்கே கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2018/07/suthanthiram-kavithai.html


அகரம் முதல் சிகரம் வரை 
ஆயிரம் வாய்ப்புகள் உண்டு
உலகை அறிந்திடு 
உழைப்பால் உயர்ந்திடு
உனக்கென ஓர் சரித்திரம் எழுதிடு!

உன் நெருங்கிய தோழனாய் 
உழைப்பு இருக்கட்டும்!
நெருங்கவே முடியாத எதிரியாய் 
சோம்பல் இருக்கட்டும்!

பலமுறை உன்னை 
நீயே கேட்டு விடு 
நான் ஏன் பிறந்தேன் என்று?

பல வெற்றி கண்ட பிறகு 
ஒரு முறை சொல்லி விடு 
சாதிக்கப் பிறந்தவன் நான் என்று !

இனியும் தாமதம் வேண்டாம்!
இறப்பதற்குள் சரித்திரம் படைப்போம்!
சுதந்திரம் வாங்கிய உறவுகளுக்கு
மன நிறைவோடு சமர்பிப்போம்!





Post a Comment (0)
Previous Post Next Post