வெப்பம் மழை வரும் அறிகுறி | veppam malai varum arikuri

வெப்பம் மழை வரும் அறிகுறி | veppam malai varum arikuri
veppam
Malai varum arikuri

தினம் பல கனவுகள்
என் கவிதையில் வருகுதே
கனவுகள் பலிக்குதே
இது என்ன மெய்யா பொய்யா?

பூக்களின் மனம் அது 
உன் இதழ்களில் தெரியுதே
நினைவுகள் தொலையுதே
நினைவினில் நீயா நானா?

கை கோர்த்து நடக்கும் போது 
உற்சாகம் கொள்ளும் விரல்கள் 
இதயத் துடிப்பில் வேகம் வேகம் 
கூடி கூடித் தொலைந்து போகிறது

கற்பனை தவறும் போது 
தடுமாறும் கவிதையாவும் 
உன் நினைவைத்தேடி 
நீந்தி நீந்திச் செல்கிறதே

பருவம் சொன்ன காதல் அது ஒ ஒ ஒ 
பலித்தே போன கனவும் அது ஒ ஒ 
கனவினில் ஒரு இதழ் முத்தம் ஒ ஒ ஒ 
கலையாத கனவு அது ஒ ஒ ஒ 
உன் வெள்ளிக் கொலுசின் ஸ்வரம் தேடி நானும் வந்தேனே
அது எட்டாவது ஸ்வரமடி

அவள் சிரிப்பின் சிதறல்கள் ஒ ஒ ஒ 
அது என் கவியின் வரிகள்  ஒ ஒ ஒ
நான் கேட்டது உதட்டோர ஈரங்கள்   ஒ ஒ ஒ 
அட கன்னத்தில் பதித்தது யாரது ஒ ஒ ஒ 
பெண்மைக்குள் இன்னொரு பெண்மை கவி 
அது கருவிழி கவிதையடா!





Post a Comment (0)
Previous Post Next Post