குடியரசு தின கவிதை | Kudiyarsu thina Kavithai
![]() |
Kudiyarsu thina kavithai |
இடைவெளி இல்லா காற்றாய்
பாரதம் எங்கும் சமத்துவம் தொடர
நகருகின்ற தனி ஊசலாய்
சம உரிமை தொடர்ந்து நீடிக்க
காலம் காட்டும் கடிகாரமாய்
அனைவருக்கும் ஒரே சட்டம்!
அன்று முதல் இன்று வரை
முடிவை எட்டா தீப ஒளியாய்
வேற்றுமையில் ஒற்றுமை
நம்மோடும் நம் உணர்வோடும்
தினமும் பயணம் செய்ய
வழி வகுத்த அரசியல் அமைப்போடு
அனைவரும் பயணிப்போம்!
இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!