உலக தண்ணீர் தினம் கவிதை | World water day Kavithai
World Water Day |
(இளைய நிலா பொழிகிறதே பாடலின் சாயலில்)
நீர் வரவு குறைகிறதே
உலகமெல்லாம் காய்கிறதே!
விழி முடி செவி அடைத்து அலைகிறமே
மானுடரே அறிவில்லையோ ! ...(2)
நீர் வரவு குறைகிறதே...
வரும் காலம் அலங்கோலம்
தலைமுறை இனி தேய்பிறையோ
வரும் மழையில் ஒரு குளியல்
எண்ணமெல்லாம் இனி மறக்கும்! (2)
கானல் நீரிலே தாகம் தீருமோ
தண்ணீரில் முகம் காண அரிதாகுமோ
தண்ணீருக்கு வரிசை அமலாகுமோ
தண்ணீருக்கா சண்டை என்றாய்
சொன்ன சொல்லை நீ மறப்பாய்
சண்டையிட்டு அறிவிழப்பாய்
தண்ணீரை இழந்து நீ நிற்பாய்!(2)
வான வீதியில் வெண் சேலைகள்
இழந்த சேலையோ கரு மேகமோ
வான் மேகங்கள் விதவைக் கோலங்கள்!
நீர் வரவு குறைகிறதே...