உயிரே ! - புது உறவு - திருமணம்

உயிரே !

உயிரே !
கோவிலுக்கு சென்றேன்
அர்ச்சனை செய்வதற்காக
தட்சனை கேட்டால்
என்னையே கொடுப்பேன்
கோவில் உன் இதயமாக இருந்தால்
அர்ச்சனை உன் இதயத்தில்
ஓர் இடமாக இருந்தால்
தட்சனை என் உயிராக இருக்கும்
இனியவளே உனக்காக
என் உயிரையும் தருவேன்...!

புது உறவு

நீ விளகிருப்பதால்
விலகி போகாது
நாம் காதல் !
அது
இதயத்தில் என்றும்
பூத்து குலுங்கும்
புது உறவு...!

திருமணம்

திருமணம்
இரு "மன' கலப்பு
என்கிறார்கள்...!
பிறகு ஏன்
"மண" விளக்கு ?

தனிமை

என் காதலியே இன்னும் சற்று
நேரம் கழித்தே வா !
உனக்காக காத்திருந்து
தனிமையை காதலிக்கக்
கற்றுக்கொண்டேன் !

ஆழம்

என் படுக்கை
அறைக்கு மட்டுமே
தெரியும்
நான் உன்மேல்
வைத்திருக்கும்
அன்பின் ஆழம் !

கிலோமீட்டர்

உன்
சென்டிமீட்டர்
புன்னகையால்
நான் என்
காதலில் பல
கிலோமீட்டர்களை
தாண்டிவிட்டேன் !

துடிக்க

கத்தி இல்லாமல்
என்னோடு
யுத்தம் செய்யாமல்
ஒரு சொட்டு
இரத்தம் கூட வராமல்
என் உயிர் போகும் வரை
என்னை துடிக்க
துடிக்க கொன்றாள்
வார்த்தைகளால் !

எதிர்ப்பார்ப்பு

ஒவ்வொரு முறையும்
என் செல் போன்
சிணுங்கும் போது
எதிர்ப்பார்ப்புடன் பார்கிறேன்
அழைப்பது
நீயாக இருக்கும்
என்று !

சில மணி

நான் மரண
வேதனைப்படும்
சில
மணி துளிகள்

நட்பால்

ஒருமுறை காதலால்
விழுந்த நான்
எழுந்து நிமிர்வதற்குள்
மறுமுறை விழுந்தேன்
நட்பால்...!

என் நாடித் துடிப்பாய்

என் நாடித் துடிப்பாய்
நீ இருக்கையில்
மறந்துவிடு என்கிறாய்...!
என் இதயம்
நின்றுவிடுமே உயிரே...!

கண்ணா !

உன் முகம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும்
கண்ணா !
என் முகவரியை தொலைத்து நிற்கிறேன்
உன் புன்னகையால் என் இதயத்தை இனியவனே
இடைவிடாமல் இயங்கச் செய்கிறேன் !

வாழ்க்கை

நான் வாழ்க்கை என்னும்
படகை
காதல் என்னும்
துடுப்பைக் கொண்டு
ஓடுகிறேன் !

என் உயிர் காதலனே..

உன்னால் தான்...

என் இதயம் இடம் மாறி துடித்தது...


உன்னால் தான்...

என் கண்கள் இயற்கையை ரசித்தது...

உன்னால் தான்...

கண்விழித்து கனவு கண்டேன்...

உன்னால் தான்...

பசி தூக்கம் மறந்தேன்...

உன்னால் தான்...

இந்த உலகத்தை அறிந்தேன். ..

உன்னால் தான்...

தனிமைய்யில் சிரித்தேன்...

உன்னால் தான்...

காரணம் இன்றி சிரித்தேன்...

உன்னால் தான்...

பாசம் என்பதை அறிந்தேன். ..

என் உயிர் உனக்காக தான்...

என் உயிர் காதலனே..

உனக்கு முன் இறப்பேன்

வால்வதாக இருந்தால்
உன்னோடு வாழ்வேன் ...
இறப்பதாக இருந்தால்
உனக்கு முன் இறப்பேன் ....

அவள் முகம்

தெளிந்த நீரில் அவள் முகம்
எனக்கோ உயிர் போகும் தாகம்
கைபட்டால் கலைந்துவிடும் அவள் முகம்
போகட்டும் என் உயிர்
அவள் முகத்தை பார்த்துக்கொண்டே

அவள் என்னை ஏமாற்றாமல் இருந்தால்

மரணம் கூட மடிந்து போகலாம் ...!
மனதுக்கு பிடித்தவர் நம்மை புரிந்து கொண்டால்...!
கவலை கூட பறந்து போகலாம் ...!
அவள் என்னை ஏமாற்றாமல் இருந்தால் ...!

என் காதல் சினிமா

காதலை சினிமாவில்
கண்டு ரசித்தேன் -நானும்
காதல் கொண்டேன் -காதல்கொண்டேன்
படம் பார்த்துவிட்டு ..............!!

என் காதல் சில காலம்
மெளனராகம் பாடி......
காதலுக்கு மரியாதை செய்து -என்
காதல் மூங்கிலாய் வளர்ந்துகொண்டது......!!

தமிழ் சின்னதிரை தொடர்போல-என்
காதலில் ஏகப்பட்ட திருப்பங்கள் மற்றும் முடக்குகள்
இறுதியில் இரயில் பயணம் போல
இல்லை இல்லை இணையாத இரு கோடு போல
என் காதலும் .......!

மறந்து விடுவேன் உன்னை அல்ல

அன்பே
உன் அழகில் நான் கைதியாகி
உன் அன்பில் நான் அகதியாகி
உன் அரவணைப்பில் வாழ
ஏதும் வழி உண்டா என் அன்பே
மாற்றான் ஒருத்தியை என்னால்
நினைக்கவே முடியாது.
எப்படி மணக்கச் சொல்லுகின்றாய்
நீ என்னை மறந்தால் நானும்
மறந்து விடுவேன் உன்னை அல்ல
இந்த உலகினை....

உன்னை நினைத்தே

ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தே
என் நிமிடங்கள்
கரைகின்றது.....

உன்னோடு பேச எண்ணி
ஓயாமல் உன் எண்களை
அழுத்தி கைபேசியில்
அச்சுக்கள் அழிந்தே விட்டன....
அழிந்து போனது அச்சுக்கள்
மட்டுமே...

என் மனதில் அழியாமல்
உன்னை சுமந்தே
தனிமையாய் செல்கிறது
என் நாட்கள்....

நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள்
மணித்துளிகளாகி
நாட்கள் ஓடி
வருடம் கூடி
இன்னும் குறையவில்லை
உன் மீது எனக்கு
உண்டான காதல்....

என் இதயத்துடிப்பின்
ஓசையில்
உன் பெயர் ஒலிக்கும்....
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயரை முத்தமிட்டே
என் இதயம் உயிர் பெறும்

உன்னை மட்டுமே நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்....
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்....

என் உயிரே!!!
சீக்கிரம் வந்துவிடு....
உன் மார்பில் முகம்
புதைத்து அழுது
என் துன்பம் மறக்கவேண்டும்
ஆதரவாய் நீ தலை கோதும்போது
என் ஆயுள் போகவேண்டும்...
உன் மடியினிலே
என் ஆயுள் போகவேண்டும்...:

Post a Comment (0)
Previous Post Next Post