ஒரே ஒரு எழுத்துப்பிழை - நரகத்தில் சட்டத்திருத்தம் - உனக்கு என் காதல் புரிகின்றதா?

ஒரே ஒரு எழுத்துப்பிழை

ஒரே ஒரு எழுத்துப்பிழை
என் காதலை புரட்டி போட்டது
அந்த அழகுப் பெண் அதை உண்மை என்று
என்னை விட்டுப் போனாள்

என் வாழ்க்கையில் மன்னிக்க மாட்டேன்
அந்த ஒரு தருணத்தை
வெகுநாள் கழித்து
இன்று அவளை பார்த்தேன்

நான் அன்று சொல்லிய வார்த்தை
நிஜம் தானோ !!!
அது என்ன வார்த்தை
கேளுங்கள் அந்த கொடுமையை

அன்பே உன் அழகு முகம்
ம"ந்"தியை போல இருக்கிறது
என்னை பார்த்து ஒரு முறை சிரி
அதுவே நம் காதலின் திறவுகோல்.

மதி மந்தியாக
மறுத்தாள் மறந்தாள் அந்த மாது
பிள்ளையார் பிடிக்கப் போய்
அது குரங்காய் முடிந்தது

ம்ம் ... ஒரே ஒரு எழுத்துப்பிழை
என் காதலை புரட்டி போட்டது
வாழ்க்கையில் என்னை குனிய வைத்து
கும்மி அடித்தது இந்த குரங்கு

நரகத்தில் சட்டத்திருத்தம்

நரகத்தில் சட்டத்திருத்தம்

ஆயிரம் பொய் சொன்னால்

ஆயுள் முடிந்த பின்

ஒரு ஆண்டு சிறை தண்டனை என்று

அதன் பின்னர் நரகத்தில்

ஆயுள் தண்டனை கைதிகளாக

காதலர்கள் அனைவரும்

அந்தோ பரிதாபம் .......

உனக்கு என் காதல் புரிகின்றதா?

அடி பெண்னே அடி பெண்னே-உனக்கு
என் காதல் புரிகின்றதா?
நான் சொல்வது -ஒன்றும் வேதமில்லை
அது என் காதலடி....

பெண்னே நீ சிரிக்க நான் சொல்வது
நகைச்சுவை வசனமில்லை
சூட்டேரிக்கும் பார்வை எதுக்கு ?நான்
ஒன்றும் காட்டுப்பூச்சியில்லை........

அடி நவீனத்தின் நளினப்பெண்னே
நான் ஒரு காதல் பூச்சியடி -நீ
புரிந்துகொள் என் கனணிப்பூவே-உன்
கனவின் காவலன் நான்............

உன் இதயத்தின் காதல் தோட்டத்தில் -எனக்கு
ஒரு வேலைகொடு -அங்கே
காவல்காரனாய் காத்திருப்பேன்-உன்
இதயத்தை களவாட..........

என் அன்பே...

என் அன்பே...
உன் அன்பில்
மெல்ல முகம்
சாய்த்துத்
தூங்க வேண்டும்.........
உன் நட்புச்
சிறகுகளுக்குள்
சற்று நேரம்
நான் -
இளைப்பாற வேண்டும்.....!!!

என்னடி, உன் ஆட்டம்.....!

காதலே,
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்கிறாய்"...........

பத்தை (10) மூன்றினாள் (3) வகுக்க,
மீதியாக,முற்று-பெறாமல்....வருமே...ஒன்று (1),

அதுபோல் முடிவு ஏதும் இன்றி
எண்ணி கொண்டு இருக்கிறேன்
உன்னையே.....!

குழந்தையை கிள்ளுவதும், பின் ஆட்டுவதும்
என்னடி, உன் ஆட்டம்.....!

என் அன்பே

என் அன்பே
உன்னை-
முத்தமிட்டு முத்தமிட்டுக்
கசங்கிப் போனது
உன் புகைப்படம்
மட்டுமல்ல...
என் உணர்வுகளும் தான்.....

என் விழியில் விழுந்தவளே

என் விழியில் விழுந்தவளே
உன்னை துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்
உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமல்
என் இரு விழிகளிலும்
கனவுகளை விதைக்கிறாய்
உன் விழிகளுடன்
யுத்தம் செய்தே
எனது இரவுகள் கழிகின்றன
என் இதயத்தை தீண்டும்
உனது பார்வை ஒன்றை
திருடி என் மனதோடு

ஒற்றி கொள்கிறேன்

ஒன்றை இழந்தால்தான்

ஒன்றை இழந்தால்தான்
மற்றொன்றை பெறமுடியும்
என்றார்கள்........
அப்படி என்றால்
காதலை இழந்து
காதலியை
பெற முடியுமா.....
என்று யாராவது
சொல்லுங்களேன்....

அதிர்ஷடம்

ஒற்றை நாணயம்
தவறி விழுந்தது
பிச்சை பாத்திரத்தில்

சோகம்

நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.

நட்சத்திரம்

அவள் வந்து கோலமிட
காத்திருக்கிறதோ,
இந்த வானத்து புள்ளிகள்.

நினைவு சின்னம்

உன்னை மறந்துவிட சொல்லி
நீ எழுதிய கடிதம்
என்னிடம் ஞாபகமாய் இன்றும்.

மணல் வீடு

கடல் கொண்டு செல்லும்
என்றாலும் நிமிர்ந்தே நிற்கிறது ,
மணல் வீடு.

நிர்வாணம்

ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!

கடவுள் தெரிகிறார்!

பத்து ரூபாய் சேர்த்து கொடுத்தேன்
இப்போது பக்கத்தில் தெரிகிறார் கடவுள்

மறதி

குடை மறந்த நாள் ஒன்றில்
மறக்காமல் வந்து சேர்ந்தது
மழை.

தாய்பால்

பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!

சாமியார்

பெண் தெய்வம்
பயந்து ஓடுகிறது
எதிரே
போலிச்சாமியார்!

வியர்வை

அன்பே
தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை.

ஆசிரியர்......அன்பு

அன்பு என்ற சொல்லுக்கு
அர்த்தம் கேட்டு
அடித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்

Post a Comment (0)
Previous Post Next Post