காதல் தோல்வி | Love failure kavithai
![]() |
Setthup po |
வன்முறை கண்ட
நம் மனதுக்குள்
தடுத்து நிறுத்த வரவில்லை
வழக்கமாய் வரும்
அந்த சமாதானத் தூதுவன்
சிகப்பு ரோஜா!
தனிமையாய் நீ அமர
தடுத்து நிறுத்திய
தாகம் கொண்ட வேண்டுகோளை
தகர்த்து எறிந்தாய்!
தணிந்து விடாத தாகம் என்னுள்!
உனக்குத் தெரியாதா?
உன்னுடனே நான் இருக்க
நான் இல்லா தனிமையை
நீ எங்கு சென்று தேடுவாய்?
பதில் சொல்லி விட்டுப் போ
இல்லையேல்
உன் இதழ்களாய்
உதிர்த்து விடு
செத்துப் போ என்று !