ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் எனது கவிதையின் வரியில் | Anantha yzhalai meetukiraai

ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் எனது கவிதையின் வரியில் | Anantha yzhalai meetukiraai


Anantha Yaalai

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன் 
அது பூவிதழ் தாண்டி அறிந்து விட்டேன் 
உன் புன்னகை தாண்டி உலகம் சொல்ல 
உலகிடம் எதுவும் இல்லையடி
சோர்ந்து கிடக்கும் நெஞ்சங்கள் எல்லாம் 
உன்னிடம் சுகங்கள் பெற்று விடும் 
கண்விழி பார்த்து கவிதைகள் படித்தேன் 
கவிதையில் எதுவும் கற்பனை இல்லை

உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன் 
அது பூவிதழ் தாண்டியதை அறிந்து விட்டேன் 

சுற்றிலும் இயற்கை சொல்லுதடி
சுந்தர தமிழில் பாடுதடி 
மீண்டும் கேட்க நாடுதடி 
உன் புகழ் ஏனோ உயர்ந்தபடி 
அடி தாளங்கள் எதற்கு ராகங்கள் எதற்கு 
உனது குரலே போதுமடி 

உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி

ரோஜாவின் இதழ்கள் சின்னதடி 
உன்னை பார்த்தால் நடுங்குதடி 
உந்தன் அழகோ கூடுதடி 
ரோஜாவோ இன்று தோற்றதடி
அதன் முள்ளையும் தொட்டு நறுமணம் கொடுத்து 
உனக்குச் சமமாய் மாற்றி விடு 

உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி




Post a Comment (0)
Previous Post Next Post