முதல் காதல் - உன்னை மாதிரி இல்லையே ? - ஆசை

முதல் காதல்

பழைய பள்ளிக்கூட
புகைப்படத்தில்,
இன்னும்
புதிதாகவே
இருக்கிறது
முதல்
காதலின் நினைவு..!

அன்றும் இன்றும் என்றும்
புதிதாகவே
இருக்கும்
அந்த முதல் நினைவு

உன்னை மாதிரி இல்லையே ?

"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை
தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

ஆசை

என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!

மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
உன் கண்களை மூடிக்கொள் .
உன் உதடுகளை விட ,
உன் கண்கள் தன அதிகம் பேசுகின்றன "

ஆசை படுகிறேன்

கற்றே உன்னை நான் சுவாசிக்க ஆசை படுகிறேன் ,
அதற்கு நீ அனுமதி தருவய ?
ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி காத்து கொண்டு ரிக்கிரேன் ,
நீ சுவாசித்த காற்றை யவுது நான் சுவாசிக்கலாம் என்று ,
எந்நாளும் உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன் ,
ஒரு முறை யாவது நீ சுவாசித்த காற்றை ,
சுவாசிக்கலாம் என்று .

பொய் காதல்

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,
கண்டேன் உன்னை இன்னொரு வானுடன் ,
வடிந்தது என் கண்களில் இருந்து ,
கண்ணீர் இல்லை , ரதம் .

பைத்தியகரன்

நான் சந்திரனை காதலித்து இருந்தால் ,
என்னை இன்று கவிஞன்னாக ஆக்கி இருப்பார்கள் .
உன்னை காதலித்தால் இன்று என்னை பைத்திய காரனாக ஆக்கி விட்டார்கள் .
பைத்தியகரன்

இதயத்தை

ரதியே உன்னை கண்டதும் மதிலந்தேன்
நிலவே உன்னை பார்த்ததும் சொல்லிலந்தேன்
வரம் கொடுப்பாயா உன் காதலை ?
கடன் கொடுப்பாயா உன் இதயத்தை ?

உனக்குள் எல்லாமே அழகு

உயிருக்குள் மனிதன் அழகு ,
மனிதனுக்குள் பெண் அழகு ,
பெண்ணுக்குள் நீ அழகு ,
உனக்குள் எல்லாமே அழகு .

முடிவு

மலையின் முடிவு மண்ணில் !
நதியின் முடிவு கடலில் !
கட்டுரையின் முடிவு ?
அதுவே நம் காதல் !

பிரிவு

தொலைவில் இருந்து பாசம் காட்ட வேண்டாம் .
நீ அருகில் இருந்து சண்டை போடு போதும் ,

My dear chellam.

மறக்கமுடிவில்லை

உறவாக இருந்தால் என்றோ மறந்திருப்பேன்
உயிரோடு அளவ கலந்துவிட்டாய்
எப்படி மறப்பது உன்னை ?

பிரிவு 1

உடலில் உயிர் இருந்தும் ,
பிணமாக அலைகிறேன் ,
என் அருகில் நீ இல்லாததால் .

மறக்க முடியல


எல்லாம் தெரிந்த உனக்கு என்னை நினைக்க தெரியல ?
எதுவும் தெரியாத எனக்கு உன்னை மறக்கமுடியல .

வெள்ளை ரோஜா

திருமணம் ஆகாமலே விதவையானது

வெள்ளை ரோஜா

தாஜ் மஹால்

அவனும் இல்லை ,
அவளும் இல்லை .
யாருக்காக நிற்கிறது காதல் காவியமாய் ?
தாஜ் மஹால் ...

கண்ணீர் துளி

சிலருக்கு பனி துளி புடிக்கும் ,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து ' பாருங்கள் ..
கண்ணீர் துளி கூட பிடிக்கும் .

காதல்

ஏன் என்னை பிரிந்து போக அவ்வளவு சங்கடப்படுகிறாய்
நாம் சந்திக்கும் ஒவ்வொரு தரமும்
கிளம்பு என்று நான் அனுமதி கொடுத்த பிறகும்
பிரிவு பிரித்து விடவா போகிறது நம்மை
-----
என்னை மறக்க நினைத்து
நீ எடுக்கிற முயற்சியெல்லாம்
நினைக்க வைத்து கொண்டேதான் இருக்கும்
சில விஷயங்களை
காரணம் நமக்கிடையே நடந்தது சம்பவங்களல்ல
சரித்திரங்கள்

கரப்பான் பூச்சி

பல நாட்களாக குடியிருந்தும்
வாடகை தரவில்லை
கரப்பான் பூச்சி !!

மரத்தை வெட்ட வேண்டாம்

'மரத்தை வெட்ட வேண்டாம்'
என்று எழுதியிருந்தது
அச்சடித்த காகிதத்தில்!

Post a Comment (0)
Previous Post Next Post