ஆசை.......!! - வழி ஓரம் விழி வைத்து...! - எதற்காக நான் பிறந்தேன்

ஆசை.......!!

எனக்கும்
ஒரு ஆசை -மறு
ஜென்மமிருந்தால் -நானும்
பெண்னாய் பிறக்க ........

அதில் நீ
ஆண்னாய் பிறக்க-கடவுள்
சித்தமழித்தால்-உனக்கு
காதல் வலி புரியவைப்பேன்........

நீ
இப்போதுகாட்டும் மெளனம்
நான் உனக்கு காட்டுவேன்
உனக்கும் காதல் வலி தெரியவரும்...........

அப்போது -நீ
தூக்கம் தொலைத்து -முகத்தில்
தாடிமுள் வளரவிட்டு-நீ
அழும்போது -நான்
ரசிப்பேன் உன் வலிகளை .........

எனக்கு வலிக்கவேண்டுமென்று-நீ
மற்றவனோடு -பேசி
சிரிப்பதைப்போல்-நான்
உனக்காய் செய்வேன்.........

அப்போது -நீ
கண்ணீர்விட்டு கதறி அழுவாய்
நான் -உன் கண்ணீரில்
உப்பு சத்திருக்க என்று ஆராச்சி
செய்து மகிழ்ந்திடுவேன்.................!

என்னக்கும் ஒரு -ஆசை
அது மறுஜென்மத்தில் -நீ
ஆணாய்ப்பிறக்க -உனக்கு
பிடித்த பெண்னாய் நான்
ஜனிக்க.....................!!!!!!!!

வழி ஓரம் விழி வைத்து...!



தூங்காத விழிகள்
துவன்டோடும்
உன் நினைவுகள்
தொலைந்து
விட்ட சுகங்கள்
தொல் பொருளாய்
தேடுதடா...

காதல் என்னும்
ஓடம் விட்டு
கஸ்டபபடுகிறேன் உன்னால்
உன்னை பார்த்த
அந்த கண்கள்
தூங்க மறுகின்றன...

வழி ஓரம் விழி வைத்து
பார்த்த கண்கள்
கண்ணீரில் மிதக்கின்றன...

வார்த்தை பேசிய என் உதடுகள்
வாயடைத்து கிடக்கின்றன
உன்னை ஏற்றுக் கொள்ளாத
இதயம்
துடிப்பற்று
இருக்கிறது...

உன்னை பிரிந்த
அந்த நாட்கள்
உனை காத்திருக்கின்றது...!
வழி ஓரம் விழி வைத்து...!

எதற்காக நான் பிறந்தேன்

எனக்காக நான் கடவுளைக் கும்பிட்டதில்லை....!
உனக்காக தான் என்பதை ஏன் நீ உணரவில்லை.

எனக்காக நான் அழுததில்லை
உனக்காக தான் அழுதேன் என்பதை ஏன் நீ அறியவில்லை...!

எதற்காக நான் பிறந்தேன் என்று தெரியவில்லை...
ஆனால் உன்னைக் காதலிப்பதால் தான்
உயிரோடு ஊசலாடுகிறேன் என்று மட்டும் தெரிகிறது....!

முத்தம்

தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே !!!
அது உன் முத்தத்தை எடுத்து கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்கு தருகிறது !!!

துடிக்கிறது

உன் இதயத்துக்கும் என் இதயத்துக்கும் ஒரு வித்தியாசம்தான்...
அது உன்னிடம் இருந்துகொண்டு உனக்காக துடிக்கிறது...!
இது என்னிடம் இருந்துகொண்டு உனக்காக துடிக்கிறது...!

என் இதயத்தையும் திருடியவள் நீயோ என

நான் எவ்வளவோ நண்பர்கள் கூட..
பழகிருக்கிறேன் அதில் உன்முகம் தான்..
எனை வதைக்கிறது அன்பே.....!
அது ஏன் என்று தான் என்னால்
உணர முடியவில்லை ???
என் மனதை மட்டும் அல்ல...
என் இதயத்தையும் திருடியவள்
நீயோ என ???
சிந்திக்க வைத்த தேவதை நீதானோ..
என விடை தெரியாமல்
தவித்து கொண்டிருக்கின்றேன்....... !

ஒற்றை ரோஜா

தரை தொடாத

விழுதுகளில்

ஊஞ்சல் ஆடுகிறது ….

அவள் கூந்தலில் ஒற்றை ரோஜா !!!!!!

நட்பின் அருமையை …..

“கடவுளுக்கு

கல்லூரியில் இடம்

கொடுங்கள்,

அபோதுதான்

உணருவான்

நட்பின்

அருமையை …..

இனி படைக்க மாட்டான்

பிரிவு எனும்

கொடுமையை !!!!!!

தாடி

காதல் தோல்வியென்றால்

தாடி வளர்ப்பதில் எல்லாம்

உடன்பாடில்லை எனக்கு.

வேண்டுமானால் வளர்க்கலாம்,

மூளையை.!!!!

என் சொர்க்கம்

மாற்றம் மனிதனின்
மறுபக்கம் எனினும்
மாறாத உன் மனம்
என் சொர்க்கம்....

ஸ்ரீ ராம ஜெயம்

எழுதினேன்.....
ஸ்ரீ ராம ஜெயம்.....
உன் பெயர் தெரியும் வரை...

தெரிந்த பின் எழுதினேன்
உன் பெயர் கொண்டு....

(ஸ்ரீ ஷோபி ஜெயம் ).....

என் வாழ்வை அர்பனிப்பேன்

வழியும் என் கண்ணீரே
என் வழித்துணையாக வருவாயோ.
பிறழும் என் இதயத்தில்
வலிகள் களைந்திட வருவாயோ.
ஈரைந்த மாதமவள் கருவில்
தவத்தில் மகிழ்ந்தோமே.
அந்த இருள் தாண்டி ஒளியில்
விழுந்தும் - பிழையால்
வாழ்வை தொலைத்தோமே?
நான் மீண்டும் சேர்வேனா?
என் தாய் மடியில்.
என் வாழ்வை அர்பனிப்பேன்
ஒரு நொடியில்.!

என் வாழ்வை அர்பனிப்பேன்

வழியும் என் கண்ணீரே
என் வழித்துணையாக வருவாயோ.
பிறழும் என் இதயத்தில்
வலிகள் களைந்திட வருவாயோ.
ஈரைந்த மாதமவள் கருவில்
தவத்தில் மகிழ்ந்தோமே.
அந்த இருள் தாண்டி ஒளியில்
விழுந்தும் - பிழையால்
வாழ்வை தொலைத்தோமே?
நான் மீண்டும் சேர்வேனா?
என் தாய் மடியில்.
என் வாழ்வை அர்பனிப்பேன்
ஒரு நொடியில்.!

நிலா

நிலா ஒளி உன் மேல்
விழுவதில்லை....
உன் நிழலென நானும்
இருப்பதாலே.....

பார்க்க முடியாமல் !!!!

உன் முகத்தை பார்க்காமல்

செல்கிறேன் !!!

உன்னை பிடிக்காமல்! அல்ல .....

நீ என்னை பார்க்காமல்

செல்வதை பார்க்க

முடியாமல் !!!!

ஒரு நாள்

உன் கூந்தலில் ஒரு நாள்
உயிர் வாழ்ந்த மகிழ்ச்சியில்
உயிர் விட்டது பூக்கள் !!!!!
எனக்கும் ஒரு ஆசை
உன் இதயத்தில் ஒரு நாள் உயிர்
வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியாய் விடுவேன் -என்
உயிரை!!!!!

சொர்க்கம்

அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது
முகம் புதைத்து

வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……
சொர்க்கத்தை……

இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?

Pirivin Theadal

kanintha idayam kana thudikuthu- athu
kana nearam vidamal theaduthu
kavalaium kannierum thathumputu
kanniyamana nampikai mattum vala vaikuthu..

யாருமில்லாத என் காதல் நெஞ்சில் ...!

யாருமில்லாத காட்டில்
நிற்பதைப்போல்...!

யாருமில்லாத கடற்கரையில்
நிற்பதைப்போல்...!

யாருமில்லாத கல்லூரியில்
நிற்பதைப்போல்...!

யாருமில்லாத பேருந்தில்
நிற்பதைப்போல்...!


யாருமில்லாத தெருவில்
நிற்பதைப்போல்...!

யாருமில்லாத என் காதல் நெஞ்சில்
நின்று கொண்டு இருக்கிறயாடி...!

இதயம் ஒரு கோவில்

இதயம் ஒரு கோவில்
என்ற நீ...!
எனக்கு மட்டும் கல்லறையில்
இடம் கொடுத்தது
ஏன்...?
காதலியே....!

Post a Comment (0)
Previous Post Next Post