தேவதை - சுயநலம் - உயிர்

தேவதை

இருப்புகொள்ளாமல் கொதித்து கோபப்பட்டு
எரிந்து விழுகிறேன் எப்போதும் உன்மேலே
அப்போதும் என் தலைகோதும் வார்த்தைகள்
தவறாமல் உணர்த்துகிறது நீ தேவதை இனமென்று

சுயநலம்

சாமி கும்பிட தோன்றியது எனக்கு.........

உன்னை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர கூடாதென்று.........@#$!?

கடவுள் நம்பிக்கை அற்ற உனது காதலன்.....!

உயிர்

அவளை பார்த்த அளவுக்கு
எதையும் பார்த்ததில்லை நான்
பிறகென்ன உயிரை பார்க்கிற பாக்கியம்
எத்தனை மனிதருக்கு வாய்த்திருக்கிறது உலகில்

வலி

கூலிக்காக சுமையை சுமதேன்

வறுமைக்காக குடும்பத்தை சுமந்தேன்

சுமக்க வில்லை நம் காதலை இறக்கினேன் வலிக்குதடி என் இதயத்தில்.

அவள் ஸ்பரிசம்

எனக்கும் மரணம் வரும்
அப்போது அவளிருப்பாளா என் அருகினில்
கண்டிப்பாய் தெரியாது
ஆனால் தெரியும்
என் உடல் உணர்ச்சி உயிர்
அனைத்திலும் அவள் ஸ்பரிசங்கள் இருக்கும்

muyarchi

வீழ்ந்துவிட்டோம் என்று
எண்ணினால்
வாழ்வின் வெற்றிகள்
வீழ்ந்துவிடும்
வீழ்ந்ததற்காக வருந்துவதைவிட
வாழ்வதற்காக
முயற்சி செய்!


Idhayam

உன்னை நான்
பார்த்ததில்லை.....
என்னை நீ
பார்த்ததில்லை.....
பின் எதற்காக
நான் வாழ
நீ துடிக்கிறாய்
"இதயமே".......

Nanban

நீ மேலே உயரும்போது
நீ யார் என்று
நண்பர்கள் அறிவார்கள்
நீ கீழே போகும்போது
உண்மையான நண்பர்கள்
யார் என்று
நீ அறிவாய்......

Un idhayam

எத்தனை முறை
நடந்தாலும்
அத்தனை பாதச்
சுவடுகளையும்
அடிக்கடி வந்து
அழித்துவிடுகிற
கடற்கரையோர
கடல் அலையாய்
உன் இதயம்

Savapettiyil

நான் என் காதலை
உரைத்தபோது
நீ மௌனம்
சாதித்தாய்!
நீ உன் காதலை
உரைத்தபோது
நான் மௌனம்
சாதித்தேன்!
சம்மதம்
சொல்ல முடியாமல்
சவப்பெட்டியில்

Kanner thuli

ரோஜாவின் மேல்
படிந்திருக்கும்
பனித்துளியை நாம்
ரசிக்கின்றோம்
யாருக்கு தெரியும்
அது செடியை விட்டு
பிரியப்போகும்
ரோஜாவின் கண்ணீர்
துளிகள் என்று.......


Neethaan ninaikiraayo!

நீ என்னை
நினைக்கிறாயோ,
இல்லையோ?
விக்கல் வரும்போதெல்லாம்
நான் உன்னை
நினைக்கிறேன்
நீதான் என்னை
நினைக்கிறாயோ என்று!!!

thavaravitta nimidangalai

மறக்க நினைக்கிறேன்
உன்னை அல்ல
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.......

punnagai

புன்னகை என்ற
முகவரி
உன்னிடம் இருந்தால்
நண்பர்கள்
என்ற கடிதம்
உனக்கு
வந்து கொண்டே
இருக்கும்....

malargal

அன்று அவளுக்காக
என்னை
நீ கொன்றாய்...
ஆனால்,
அவளோ உன்னை
கொன்றுவிட்டாள்...
இன்று-
உன் கல்லறையின்
அருகில் யார்
இருக்கிறார்
என்னை தவிர!!!

maezhuguvarthi

மெழுகுவர்த்திக்கு
உயிர் கொடுக்க
உயிர் விட்டது
"தீக்குச்சி"
அதை,
நினைத்து நினைத்து
உருகியது
"மெழுகுவர்த்தி"...

En uyir

நான் உயிரோடு
இருப்பது எல்லோருக்கும்
தெரியும்...
ஆனால்,
என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்கும் தெரியாது
உன்னை தவிர.....

mudhal dheivam

கல்லில் செதுக்கும்
சிலையைவிட
கருவில் சுமக்கும்
தாய் தன
முதல் தெய்வம்....

kanneer

காதலித்தபோது கைவிட்டு
சென்றவனே...!
கால் தவறி கூட
என் கல்லறை பக்கம்
வந்துவிடாதே
என் கல்லறை பூக்கள்
கூட கண்ணீர் சிந்தும்.....

கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்!

Post a Comment (0)
Previous Post Next Post