தரிசனம் - ஏன் அம்மா மறந்து போனாய்...? - குழந்தை பருவம்

தரிசனம்

கோவிலில் கூட்டம்
தேவி தரிசனம்
நடிகை

ஏன் அம்மா மறந்து போனாய்...?

தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா?

குழந்தை பருவம்

உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்ததற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான் உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?

மாற்றம்!

உழவுத் தொழிலோடு உடன்வந்த ஏர்மாடு நிகழ்ந்த நிகழ்வுகளாய் வரலாற்றுப் பதிவாகிறது. மறந்தே போகும் மாட்டுப்பொங்கல் வரும் காலங்களில்..... கொண்டாடப்படலாம் எந்திரங்களோடு எந்திரமாய்.... எந்திரப்பொங்கல்!

அழகால் ஆபத்து

அழகாக
இருக்கின்ற
மயில்களின்
இறகுகளைத்தான்
பிடுங்குகிறார்கள்...
அண்டங்
காக்கைகளின்
இறகுகளை அல்ல!

அழகாக
இருக்கின்ற
ரோஜா
பூக்களைத்தான்
பறிக்கிறார்கள்...
எருக்கம்
பூக்களை அல்ல!

யார்?

பூமிக்கு
மது
ஊற்றிக்
கொடுத்தது யார்?
பூகம்பமாக
தள்ளாடுகிறது...!

எப்படி முடிந்தது..???

எப்படி முடிந்தது..???
உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது..???
என் இதயத்தின் துடிப்பாக
உன் இதயத்தை
கொடுத்துவிட்டு
என்னை மறந்துபோக !!!!

உனக்கு மட்டுமா?
இல்லை இல்லை
எனக்கே என்னை
கிடைக்காமல்
செய்து விட்டாயே??

நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை

பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!!!

நான் தெரிந்துகொண்டேன்

என் முகம்
காண மறுக்கும்
உன் விழியில்

என் காதோடு
பேச மறுக்கும்
உன் குரலில்

என் நினைவை
நினைக்க மறுக்கும்
உன் நினைவில்

என் துடிப்பை
உணர மறுக்கும்
உன் மனதில்

என்னையே
மறக்க நினைக்கும்
உன்னில்

நான் தெரிந்துகொண்டேன்

என்னை நீ வெறுத்து
சென்றதை

என் உயிரை உன்னோடு
எடுத்து சென்றதை

உயிர் வாழ்கிறாய் – நீ

என் இதயம் துடிப்பதை
நான் இதுவரை
கண்டதில்லை

இன்று கண்டுகொண்டேன்
உன் அன்பின் ஆழத்தில்

விடாமல் துடிக்கும்
என் இதய துடிப்பாய்
என்னுள் என்றும்
உயிர் வாழ்கிறாய் – நீ

நான் தோற்று விட்டேனே..!!!

நான் வலுவிழந்த
போதெல்லாம்
என்னுள் இருந்த
என் நீண்ட பலமே

நான் நினைப்பதை
என் நினைவு
அறியும் முன்னே
அறிந்து
நிறைவேற்றிய
என் அன்பு நினைவே

என்
விழி நீர்
என் உதடு
தொடும் முன்னே

உன் விழி நீரால்
தரை நனைத்த
என் அன்புக் கண்ணீரே

நான்
தோல்வியுற்று
துவண்டு
போகும் போதெல்லாம்
தோள் கொடுத்துத் தேற்றிய
என் அன்பு தோழியே


இன்று உன்னையே
தொலைத்து
நான் தோற்று விட்டேனே..!!!

உன் இதயம் மறுப்பதேன்

ஒரு நிமிடம்
என் விழிகள் காண
உன் முகம் தருவாயா

அந்த சிறு நிமிடம்
பெரும் யுகமாகும்
வரம் தருவாயா

என் விழிகள் மூடி
உன்னை நினைக்கையில்
மட்டும்
அழுகை வருவதேன்

என் அளவில்லா
அன்பை நினைக்க
மட்டும்
உன் இதயம் மறுப்பதேன்

நான் சுவசிப்பதையே..!!

என் விரல்கள்
உன் பெயரை எழுத மறந்தால்
என் கைகளை
நானே துண்டித்துவிடுவேன்

என் நடைகள்
உன் பாதை நடக்க மறந்தால்
என் கால்களை
நானே முறித்துவிடுவேன்

என் விழிகள்
உன் முகம் காண மறந்தால்
என் இமைகளை
நானே எரித்துவிடுவேன்

என் நினைவு
உன்னை நினைக்க மறந்தால்
என் நினைவை
நானே அழித்துவிடுவேன்

என் இதயம்
உன்னில் துடிக்க மறந்தால்
என் துடிப்பை
நானே தடுத்துவிடுவேன்

என் உயிர்
உன்னை தேட மறந்தால்
நான் சுவசிப்பதையே நிறுத்திவிடுவேன்

உன் நினைவுகள்

உன்னை
மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி
ஓடிக்கொண்டே இருகிறேன்

நான் ஓடும்போதெல்லாம்
என் நிழலாக
உன் நினைவுகளே
என்னை
துரத்திக்கொண்டு வருகிறது

எங்கும் நிறைந்திருக்கும்
வானம் போல்

உன் நினைவுகளே
என் மனவானில்
என்றும் நிலைத்திருக்கிறது

மெல்லவே மறைந்தாயே..!!!

ஓர் கருமை இருளில்
வானம் கண்டேன்
வெண்ணிறக் கவிதையாய்
உன்னைக் கண்டேன்

கண்கள் அசையாது
இமைகள் மூடாது
உன் வெண் விழி பார்த்து
விழித்தே இருந்தேன்

என் கண்கள் நிறைய
உன் அன்புக்
கவிதைகள் தந்து
என் கண்விழி மூடி

ஓர் மஞ்சள் வெயில்
மேகத்தினுள்ளில்
மெல்லவே மறைந்தாயே
நிலா..!!!

உன் வருகைக்காக

உன் வருகைக்காக
காத்திருக்கும் போது மட்டும்
ஏன்
என் கடிகார முள்
நொடி கடக்க
வருடம் எடுதுக்கொள்கிறது ?

மௌனம் பேசும் வார்ததை

உனது சூரியோதயத்தால்
என் வாழ்க்கை
ஒளிவிட்டு பிரகாசிக்கிறது

உன்னை நினைக்கும்
பொழுதுகளில் என் மனவானில்
ஆயிரம் படடம்பூச்சிகள் பறக்கிறது

எனது கவலைகளை போக்கி
என்னை சிரிக்க வைக்கும் நீ
என்னை சிந்திக்கவும் வைத்து விடுகிறாயே..

நம் சிந்தனைகள் ஒன்றாகவும்
பேசும் வார்த்தைகள் ஒன்றாக
இருக்கும் பொழுது
எனது மௌனம் பேசும் வார்ததை மட்டும்
உனக்கு ஏன் இன்னமும் புரியவில்லை ?

என் இனிய தோழி

என் பூமி
இன்பமாய் நனையும்
அழகிய மழை - நீ

என் வானம்
அழகுற தோன்றும்
அழகிய வானவில் – நீ

என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ

என் இமைகள்
அசையாமல் ரசிக்கும்
அழகிய ஓவியம் – நீ

என் நெஞ்சை
இதமாய் வருடும்
அழகிய தென்றல் – நீ

என் இறுதி வரை
என்னுடன் தொடரும்
அழகிய உயிர் – நீ

என்றும்
என்னுள்ளே நிலைத்திருக்கும்
என் இனிய தோழி – நீ

ஒரு நொடிப்பொழுதிலும்

என்னைக்
கடந்து போகும்
ஒரு நொடிப்பொழுதிலும்

நீ
என்னால்
நினைவு படுத்தப்படுகிறாய்

என் உயிர் வாழ..!!!

உன் இமை மட்டும்
போதும்
என் விழி மூட

உன் விரல் மட்டும்
போதும்
என் விழிநீர் துடைக்க

உன் நினைவு மட்டும்
போதும்
என் இதயம் துடிக்க

உன் இதழ் மட்டும்
போதும்
என் மௌனம் நீக்க

உன் இதயம் மட்டும்
போதும்
என் உயிர் வாழ..!!!!

sugamaaga

தென்றல் மோதி பூக்களுக்கு
வலிப்பதில்லை
ஆனால்,
உன் நினைவுகள் modhi

Post a Comment (0)
Previous Post Next Post