யாரை நோவது... - அளவுக்கு மீறி - தோழன் மட்டுமே

யாரை நோவது...

யார் வாழ்ந்தால் என்ன?
யார் இறந்தால் என்ன?
மனதை கோயிலாக்கு-அதில்
இறைவனை நிரந்தர நண்பனாக்கு!

அழகு நிறைந்த உலகம்
ஆண்டவனின் கை வண்ணம்
ஆராதித்தால் வரும் இன்பம்
அனுபவித்தால் பெரும் துன்பம்!

மனிதனை மனிதன் துதிக்கிறான்
பதவியும் பொருளும் குவிக்கிறான்
மங்கை நிலவை அணைக்கிறான்
மரணம் என்றால் துடிக்கிறான்!

பொருள் இருந்தால் மதிக்கிறான்
அருள் இருந்தால் துதிக்கிறான்
இருள் மனதில் நடிக்கிறான்
இறைவனை துணைக்கு அழைக்கிறான்!

பக்தியிங்கு பகல் வேடம்
பண்புக்கு வந்ததிங்கு தோஷம்
பணமிருந்தால் வரும் சந்தோஷம்
குணத்திற்குப் பிடித்தது ஜலதோஷம்!

சராசரி மனிதனிங்கு பாவம்
சளைக்காமல் உழைப்பவருக்கு ரோகம்
பணக்காரருக்குப் போகம்-அவர்
பக்கமே அடிக்குது யோகம்!

நூறுவயது வாழ்வதில்லை சாதனை
ஆயிரமாண்டு நிலைக்கணும் போதனை
உன்னை உணர்வதே சாதனை
உலகில் மீதியெல்லாம் சோதனை!

ஆண்டவன் மனம் மாறணும்
கண்திறந்து ஏழைகளை பார்க்கணும்
பணக்காரருக்கு அருளைக் கொடுக்கணும்
ஏழைகளுக்கு பொருளை கொடுக்கணும்!

இறைவனிடம் வாழ்க்கையை விடுத்து
நம்பிக்கையை மனதில் நிறுத்து
நம்பியவருக்கு கை கொடுத்து
நாணயமாய் வாழ்க்கையை நடத்து!

அளவுக்கு மீறி

நான் அளவுக்கு மீறி
உன்னிடத்தில்
அன்பு வைதிருப்பதாலா ?
அதை நீ எனக்கு
திருப்பி தர
மறுக்கிறாய்?

தோழன் மட்டுமே

என்னை அழவைப்பதில்
உனக்கு மகிழ்ச்சி என்றால்
தாராளமாக
சொல்லிவிட்டு போ....
நீ என்
தோழன் மட்டுமே !

புரிந்து

எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள
முடியாத பொது
உனக்குள் இருக்கும்
என்னை எப்படி
தெரிந்து கொள்வாய் !

இருப்பதால்

உள்ளுக்குள்
நீ
இருப்பதால்
தான்....!
உயிரோடு
நான்
இருக்கிறேன்...!

மனதுள்

எதையும் நிறுத்த
முடியாதவனாய்
வாழ்கிறேன்
உன்னை என்னுள்
நிறுத்திக் கொண்டு !
உன் நினைவை
மனதுள்
நிறுத்திக் கொண்டு !

ஞாபகம்

என்றோ
ஓர் நாள் பார்த்த
உன் ஞாபகம்
மீண்டும்
பார்க்க கூடுமோ..!
உன் முகம்
அன்றாவது உன்னிடம் பிறிவுமோ
என் தேகம் !

அன்பாய் இருந்த நீ

அன்று அன்பாய்
இருந்த நீ
இன்று அமைதியாய்
மாறியதேன்
இது உன்
பழக்க தோஷமா?
இல்லை
என்னுடன்
பழகியது வேஷமா?

மறக்க வேண்டும்

உன்னை
மறக்க வேண்டும்
என்றே நினைக்கிறேன் !
என் நினைவே
நீ தான்
என்பதே அறியாமல் !

துடிக்கும் காதல் மனம்

(பல்லவி)
துடிக்கின்ற மனம் எனது - அதில்
துயில்கின்ற காதல் உனது
படிக்கின்ற பாடம் இனிது- இனி
படிக்கப்போவது புதிது! (துடிக்கின்ற)

(சரணம்)

ஆண்: உந்தன் முகம்பார்த்து சிரிக்கும் நிலவை
உந்தன் இதழ் பார்த்து விரியும் மலரை
சுகம் கேட்டு துடிக்கும் உறவை..
வந்து தழுவாமல் தடுக்கும் மனது
பகலிலே பார்வை பேசும்
இரவிலே மவுன கீதம்
நான் உனை... நீ எனை....
அங்கு என்றும் என் ராஜ்ஜியம் (துடிக்கின்ற)

பெண்: கடலிலே எழும் அலைகள்
கன்னி நெஞ்சின் ஒலிகள்
என் இரவு உறங்கவில்லை
உன் உறவு மறக்கவில்லை..
நான் இனி உன் சொந்தம்
தேன் இனி பருகலாம்
தேவைகள் தீர்க்கலாம்
இங்கு என்றும் உன் ராஜ்ஜியம்...(துடிக்கின்ற)

கனவுகள்

கண்கள் எனதாக இருந்தாலும்
உன் கனவுகள் என்றும் உனதாக இருக்கும் !
தூங்கி விட
மறக்காதே
என்னை தூக்கில் இட்டு
வதைக்காதே !

காதல்

கா த்திருந்தாலு
த வமிருந்தாலும்
உனக்கு புரிவது
ல் லை
காதல்...!

மனதில்

மரம் வளர்த்தல்
மழை வரும்
மண்ணில் !
மனதில் வளர்த்தேன்
உன்னை !
மழை வருதே
என் கண்ணில்....!

தமிழனின் தமிழ் மொழி உரையாடல்கள்

தமிழனின் தமிழ் மொழி உரையாடல்கள்
=======================================

வீட்டில்
=======
Hey Honey Where are You
நான் Kitchen-la இருக்கிறன் dear.
Good Morning dear.
Tea ready-ya
News Paper எங்கே
என்ன breakfast இன்னைக்கு
Dosa -உம் onion chutney உம்
it 's awesome combination...
Lunch box pack பண்ணிடீயா
quick dear எனக்கு ரொம்ப late ஆகுது
five minutes wait பண்ணுங்க quick -அ prepare பண்ணிடறேன்
நீ நேத்து தந்த potato fry really superb இருந்துச்சி
அதை செய்த உன் கைக்கு ஒரு diamond bangles செய்து போடணும்

அது எல்லாம் OK நம்ம வீட்டு little angle எங்கே
Daddy i am here...
என்ன ஆச்சி என் honeyku
ரொம்ப dull-a இருக்கா
நீ இது மாதிரி sada இருந்த
daddy ரொம்ப feel பண்ணுவேன்தானே
சொல்லு உனக்கு என்ன problem
school-la teacher எதாவது punishment தந்தாங்கலா
நீ என்ன mistake பண்ணின
நான் homework complete பண்ணல அதனாலதான்
நீ ஏன் homework complete பண்ணல
நான் நேத்து rain-la complete-a wet ஆயிட்டேன்தானே
நேத்து full day fever இருந்துச்சி
அதனாலதான் என்னால homework complete பண்ணமுடியல
ok no problem next time-la இருந்து daddy உன்னக்கு help பண்றேன் okva
OK DONE.

நண்பர்களிடத்தில்
=================
today's plan என்னடா
movie போலாமா
நேத்து ஒரு movie பார்த்தேண்ட
oh what a movie
simply superb
what a direction, photography
Technicalla கலக்கிடாண்ட
என்ன english movie-ya
noda Tamil movie தான்

இதைத்தான் நாம் தமிழ் என்கிறோம்
நம் குழதைகளுக்கும் கற்று தருகிறோம்
இதை தொடர்வதா மாற்றுவதா என்பது
நம் கையில்தான் உள்ளது.

சிந்திப்போம்...
மாற்றுவோம்...
திருந்துவோம்...
திருத்துவோம்...

மனசு

அன்பே !
நீ
நாயோடு
கொஞ்சிப் பேசுகையில்
குரைத்து கொண்டிருக்கிறது
என் மனசு......!

நிலா

அடடே !
குடத்துடன்
என்னவள்
குலத்திற்கு
வருகிறாள்...!
அவள் வருகைக்கு முன்னரே
அவள் அழகை ரசிக்க
குளத்திற்குள் காத்திருக்கிறது


நிலா.......!

அழகு


அவள் போட்ட
கோலத்தை விட
அதை சுற்றி இருந்த
அவள் பாதங்களே
அழகு...!
இளமைக் கோலம்...!

ஒற்றை ரோஜா

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா

அவள் இல்லாமல்

அவள் இல்லாமல்


போன வழியும் தெரியல
வந்த வழியும் புரியல;

கண் மூடி திறக்கும் முன்
எல்லாமே நடந்துருச்சு;

அவ கிட்ட கூட சொல்லல,

கை பிடிச்ச நாளாய்
என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய்
என் கூடவே தான் அவ இருப்பா;

பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ
புரியலையே!

நான் சிரிச்சா அவ சிரிப்பா,
நான் அழுதா அவ தொடப்பா,
இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம்

சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு
நான் சாப்புடாம;

வெளிய நான் போனாலும் மனசெல்லாம்
வழியில வெச்சு காத்து கெடப்பா;

நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட
ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல;

பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட
எங்க காதல் கொறையவே இல்ல;

மருமகளுங்க வந்தும் கூட
அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும்

கெழவி ஆகியும் கூட அவ இன்னும்
எத்தனை அழகாதான் இருக்குறா;

என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய
விட்டுட்டு வந்துட்டேனே;

அவ இல்லாம இந்த சொர்க்கமும்
எனக்கு நரகம் தான்!..........

அவள் இல்லாமல்

அவள் இல்லாமல்


போன வழியும் தெரியல
வந்த வழியும் புரியல;

கண் மூடி திறக்கும் முன்
எல்லாமே நடந்துருச்சு;

அவ கிட்ட கூட சொல்லல,

கை பிடிச்ச நாளாய்
என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய்
என் கூடவே தான் அவ இருப்பா;

பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ
புரியலையே!

நான் சிரிச்சா அவ சிரிப்பா,
நான் அழுதா அவ தொடப்பா,
இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம்

சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு
நான் சாப்புடாம;

வெளிய நான் போனாலும் மனசெல்லாம்
வழியில வெச்சு காத்து கெடப்பா;

நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட
ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல;

பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட
எங்க காதல் கொறையவே இல்ல;

மருமகளுங்க வந்தும் கூட
அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும்

கெழவி ஆகியும் கூட அவ இன்னும்
எத்தனை அழகாதான் இருக்குறா;

என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய
விட்டுட்டு வந்துட்டேனே;

அவ இல்லாம இந்த சொர்க்கமும்
எனக்கு நரகம் தான்!..........

Post a Comment (0)
Previous Post Next Post