பிரிவு - காதல் பரிசு - தனிமை

பிரிவு

என்னவர்களே
உயிரின் ஒரு துளியை இங்கே விட்டு செல்லுங்கள்
நான்
உயிர் வாழ உறுதுணையாக இருக்கட்டும்!

காதல் பரிசு

உனக்கு மலர் பிடிக்காதென்று மலர் சூடா மங்கையாக இருந்தேன்.

அதற்கு நீ எனக்கு அளித்த பரிசு என் இதயத்தில் மலர் வளையம்.

தனிமை

அவன் என்னிடம் சிரித்து பேசிய காலம்மும் உண்டு ,
அதை நினைத்து மகிழ்கிறேன் இன்று!
ஆனால்............
அந்த காலம் இனி எப்போது வரும் என்று தவிக்கிறேன் நான் தனிமையில் இன்று!

கனவு




இன்பமாகவே
ஒரு
கனவு
எனக்கான உலகத்தில்
நீ மட்டும்
என் கணவனாக!

மௌனம்

அன்று
மௌனம் - எனக்கு மிகவும் பிடித்த விஷயம்!
ஆனால், என்னில் இல்லாத ஒன்று!
இன்று
மௌனம் - எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம்!
ஆனால், என் சொந்தம் ஆயிற்று
காரணம்
நீ என்னிடம் காட்டிய மௌனம்.....

தாலாட்டு (பெண்)

பட்டுப் பாப்பா தூங்கு!-நீ
பாலும் குடித்தாய் தூங்கு!
மொட்டில் மணக்கும் முல்லை!-என்
முத்தே என்ன தொல்லை?
சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்.
பிட்டும் தருவேன் தூங்கு!-என்
பெண்ணே கண்ணே தூங்கு!

பாசம்

நீ இருக்கும் உலகத்தில்

காற்றுக்கும் வேலை இல்லை ....

நீ மட்டும் போதும்

எனக்கு உலகத்தை

புரிந்து கொள்ள .....

நீ நான்

என்று இல்லாத நிலை

வேண்டும் இந்த வேளையில்.

நீ சுவாசித்த காற்று

எனக்கு மட்டும் தான்

சிறுப்பிள்ளை தனமான பிடிவாதம்

வந்ததே உன் நாசியில்

இருந்து வந்த காற்றின்

சுவை அறிந்த பின்பு .

நிலவு

விதவை வானம்
மறுநாளே திருமணம்
பிறைநிலவு

ஐயம் வரலாம்???

சீதை அசோகவனத்தில் ஹனுமனிடம்:
எனை மீட்க-
ஐயன் வரலாம், மீட்டபின்
ஐயம் வரலாம் நான்
சிறை நீங்கினாலும் - என்
கறை நீங்குமா ?

இன்னிசையாக

இன்னிசையாக

உனது ஆறுநாள் புன்னகை
என் இருதயத்தின் ஒரு சிறு கீரல்
நீ பேச முடியாத மௌனங்கள்
என்னுள் இன்னிசையாக
உனது அழுகுரல்
என் மனதின் பிரதிபலிப்பு
உனது மெல்லிய சிரிப்பு
எந்தன் ஜீன்களின் பரவசம்.

இருத்தல் வேண்டும்..

இருத்தல் வேண்டும்..

என் சிந்தனைகள் கலைகின்றன
உன் இமையின் எழுச்சியில்..
நித்தம் உன்னைப் பார்க்காமல் இருக்க
வேண்டுகிறேன்..

ஏழு பிறவிகள்
உலகில் உண்டு எனில்
மறு பிறவியில் நான்
உன்னை பார்க்காமல்
இருத்தல் வேண்டும்..

கண்ணீர்த் துளிகள்..

கண்ணீர்த் துளிகள்..

இன்றொடு பத்து வருடங்கள் கழிகின்றன.
உன்னை பார்க்காமல்..
இருந்தும் என் எண்ணஙகள் உன்னில்
நினைவிழந்து கிடைக்கின்றன..

உன் இமைகளின் ஒரத்தில் துளிர்விடும்
கண்ணிர்த் துளிகள்..
கல்லூரி வாழ்வின் நண்பர்களின் பிரிவினைகள்...
என் உணர்வுகளில் மனதில் தள்ளப்படும்
ஒரங்க நாடகமாக
இன்றும் மனதில் நீரோட்டமாக பதிவுகளாகின்றன.

இழுக்கிறாய்..

என் குளிர்காலக் கனவுகள்
மறைகின்றன
நிகழ்கால நிஜங்களில்..

சிறு இடைவெளிகளில் உன்னை
காண்கிறேன்.
உன் இருகண்களில்
என்னை இழுக்கிறாய்..

தலைப்புகள் இல்லாத கவிதைகள்

உன் கனிப்பான (கனிவான) பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளங்களில் பருவக்காற்றாக..


குயில் ஒசையாக என் மனதிலும்
தெருக்களிலும் வண்ணக்கோலங்கள்
இட்டு சென்று விட்டாள்..

கற்சிலை போலிருந்த எனக்கு
உயிர் அளித்தவளே நீ தான்..
என்னை ஏன் விலகிச் செல்கிறாய்..
நான் அறியாத காரணத்தால்..

என்னையறியாமல்...

என்னையறியாமல்...


என் மனதில்
சப்தங்கள் இல்லாமல்
யுத்தங்கள் செய்கிறாய்
என்னையறியாமல்...

பனித்துளி

வானக் கன்னிகையின்
கோலப்புள்ளி
பனித்துளி

முழுமதி

சன்னல் முற்றத்தின் அறை
நிலா வெளிச்சம்
என் மனத்திரையில்
உன் மலர்முகம்..

என் மனதில் முழுமதியின்
வெளிச்சமாக நீ தான்..

கொஞ்சம்

உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண் இரண்டும்
ஒளி கொள்ளும்
காதலித்துப்பார்
அமுதம்

கடமை

புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்

நா ஒன்றுதான்

வெற்றிக்கும் தோல்விக்கும்

களம் ஒன்றுதான்

இரவுக்கும் பகலுக்கும்

நாள் ஒன்றுதான்

நன்மைக்கும் தீமைக்கும்

விதி ஒன்றுதான்

வாழ்வுக்கும் தாழ்வுக்கும்

வாழ்க்கை ஒன்றுதான்

வரவுக்கும் செலவுக்கும்

பொருள் ஒன்றுதான்

அன்பிற்கும் ஆதிரத்திற்கும்

இதயம் ஒன்றுதான்

உள்ளம் தராசானால்

ஏற்றத் தாழ்வு இல்லை

கடமையைச் செய்

பலனை எதிர்பாராதே!

என் அன்பே !

நீ பிரிந்து விட்டாய்
என் அன்பே !
காதலெனும்
வாணலியில் வறுபடுகின்றது
என்
இதயமென்னும் இறைச்சித்துண்டு

Post a Comment (0)
Previous Post Next Post