நிஜமானபோது - உன் இதயத்தை நோக்கி - முயற்சித்தேன்

நிஜமானபோது

அவள் நினைப்பில் இருக்கும் போது
கவிதையே எழுதினேன்
என் அருகில் வந்தபோது – அது எனோ
வார்த்தையே வரவில்லையே

உன் இதயத்தை நோக்கி

சூரியனாய் நீ இருந்தாலும்,
பூமியாக உன்னை சுற்றி வருவேன்,
நீ என்னை சுட்டு எரிக்கும் வரை.

முயற்சித்தேன்

தப்பிக்க முயற்சித்தேன்…
உன் விழிக் குளிக்குள் – என்னை
விழித்திக் கொண்டாய்
எழ முயற்சித்தேன்…
கட்டிப் பிடித்து – உன்
இதயக் குழிக்குள் – என்னை
சிறைவைத்துக் கொண்டாய்
தப்பிக்க முயற்சித்தேன்…
இறுகப் பிடித்து – என்
இதயத்தைத் திருடிக் கொண்டாய்
இனி…
எப்போது கல்யாணம்?

முதற் காதலி

எனக்கும் ஒருத்தி வருவாள்
உன்னை விட அழகாக இருப்பாள்
அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள்
மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள்
முடிவாக என்னோடு இருப்பாள்
இருந்தும் …
உன்னைப் போல் அவள் இல்லையே!

கண்ணுக்கு மை போடும் பெண்

கண்ணுக்கு மை போடும் பெண்நே
என்னை கொள்வதற்கு உன் இமை போதும்
எதற்கு விஷம் தடுவ்கிரை பெண்நே

உன் நினைவு

எப்பொழுதும் உன்னை நினைத்திருப்பேன் ,
எப்பொழுதாவது என்னை நீ
நினைக்க மாட்டாயா ! என்று .

பார்த்த முதல் நாள்

பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை.
பார்த்த நாள் முதல் நினைவே இல்லை.

என்ன பெயர் ..??

நான் எழுதும் வார்த்தைகளை
கவிதை என்றாய் ...!

அப்படி என்றால்

என்னை இயக்கவிகும்
உன் புன்னகைக்கு

என்ன பெயர் ..??

நிழல்

உன் பின்னால் திரும்பி பார்,
என் நினைவுகள் எல்லாம் நிழலாக,
தொடர்கிறது...

பொதுப்பால்

ஆண்பால்
பெண்பால்
பொதுவானது
நட்பால்

விரல் பட்ட நொடிஎனில் !

என் கல்லறைக்கு
வந்து தோண்டி பார் !

இதயம் துடித்திடும்
உன் விரல் பட்ட நொடிஎனில் !

கண்

உன்னை பார்க்கும் போது தான் கண் இருப்பதை உணர்தேன்.
அதே போல் உன்னை காணாத போது தான் அதில் உள்ள கண்ணீரையும் உணர்ந்தேன்

கல்லறை மரணம்

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதையம் வேண்டும்...
ஜனனம் ஒன்று இருந்தால் அதில்
நீயே வேண்டும் உறவாக அல்ல,
உயிராக...

கவிதை... காதலி

கவிதை எழுத நினைத்து
எழுதி பார்த்தல்
அட
வந்தது
என் காதலி பெயர்

கோபம்

அன்பு" யார் மீதும் காட்டலாம்
ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான
உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்

உன் சிரிப்பு

இறந்த உயிரை
இழந்த உயிரை
மீண்டும்
பெற்று தருமாம்..

இசை ..!

எனக்குள் இருக்கும்
உயிரை
தட்டி பறிகிறது..

ஒரு இசை..!


" உன் சிரிப்பு "

காதல்

என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும்,
மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன்,
உன் நினைவுகளை
அதுதான் காதல்

தோழி

"நீ
என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட..
"நீ
என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்
தோழி...!

ஆண்கள் காதல்

மனதை பார்த்து வருவது தான் காதல் என்கிறீர்கள்,
பின்பு ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் முகத்தை பார்த்து....

கண்ணீர்

காதலனே..
நான் ஒவ்வொரு நாளும் கண்ணீர்
வடிக்கின்றேன்
உன்மேல் நான் வைத்த காதல்
கரையட்டும் என்று

Post a Comment (0)
Previous Post Next Post