கண்ணீர்......! - பிரிவுகள் நிரந்தரம் - Heart Attack!

கண்ணீர்......!

நீ
சிந்தும்
ஒவ்வொரு
கண்ணீர் துளிகளில்.....

ஒவ்வொரு ஆணின்
ஏக்கமும்,
சோகமும்
நிறைந்திருகிறது....


புதியவன்.மு

பிரிவுகள் நிரந்தரம்

ஊரே உறங்கி கிடக்கும்
அர்த்த ராத்திரியில் கூட
உன் நினைவுகள் நெஞ்சில்
ரணமாய் பதிந்ததனால்
விளித்து கிடக்கிறேன்
அந்த விண்ணுலக விண்மீன்கள் போல
இரவு கூட சீக்கிரம் விடிந்து விட்டது
என் நிலை கண்டு
ஏன் நீ மட்டும் இன்னும்

Heart Attack!

Affection!
Is the first attack of Heart!
Love!
Is the second attack of Heart!
Marriage!
Is the final attack of Heart...rvm!

Friendship

Friendship is greaterthan the Love!
Because...
Friendship is the medicine of Heart!
But!
Love is the poison of Heart...rvm!

மெய்காதல் உலகொன்று

விழி நீரில் உள்ளம் நிறைகின்றதே.
வழிந்தோடி உயிரில் உறைகின்றதே.
உறவென்று சொல்ல நீ வந்த போதும்.
பிழையான சொல்லால் உடைந்தேனே நானும்.
மனம் ரெண்டுமிங்கு ஒன்றான போதும்
ஊரின்று தடுக்க கண்ணீரில் நானும்.

அன்பான உள்ளங்கள்;பறிமாறும் இதயத்தில்
சேர்ந்திங்கு வாழ விதி வேண்டுமே.
தடையேதுமில்லாமல் பிழை யாரும் சொல்லாமல்
மெய்காதல் உலகொன்று இனி வேண்டுமே.
உயிர் கொஞ்சம் கிழித்து உணர்வெழுதும் காதல்
பொய்த்தொன்றும் போகாத நிலை வேண்டுமே.

அன்பென்ற சொல்லிற்கு அர்த்தங்கள் தெரியாத
உயிர் மாண்டாலும் பிழையில்லையே.
உயிர் தந்த காதல் பிழையென்று சொன்னால்
உன் உயிர் தாங்கும் உயிருக்கு வழியில்லையே.

நரகத்தை தந்தாலும் காதல் சொர்க்கம்.
நீ பிழையென்று சொன்னாலும் நாம் காதல் வர்கம்.
இந்த நிலைபாடு மாறாது என்றும் எதற்கும்.
அது மரித்தாலே அப்போது உலகம் நிற்கும்.

இளைஞனே

இளைஞனே.. மெல்ல எழுந்து வா..
உன் விழிகளில் உலகை இயக்க வா.
தோள்களில் உறம் நீ சுமந்து வா..
தோல்விகள் உனை கண்டு நடுங்குமே,
அந்த கர்ஜனையில்.. உலகை ஆள வா..!

பூக்களை, நீ தான் பாரக்கையில்.,
உனக்கென சிந்தும் பூ மழை.
முட்களை நீ தான் பாரக்கையில் .,
முள் நுனியிலே தேன் சொட்டும் உனக்கினி..!
அந்த சூரியனாய்;
அந்த சந்திரனாய் ..
உன் ஆளுமை வேண்டுமே.. நீ வா.. நீ வா..

உலகிலே உள்ள பிழைகளை.,
கல்வியால்' கெய்வோம்! வா.. வா..
மறைகளில் உள்ள கருத்தக்கள்.,
நித்தம் மனதிலே கொள்வோம். வா.. வா..
வெற்றின் விளிம்பிலே ஒன்றுமே இல்லையே,
தோல்வி தான் வாழ்விலே
உன் நிலைகளை சொல்லுமே.! நீ வா.. நீ வா..

துணிந்தால்..

வாழ்க்கையே வாழ்க்கையே
வலிகள் நிறைந்ததடா.
வலிகளை நீ கடந்து விட்டால்
இன்பம் உள்ளதடா.
வலியின்றி எதுவுமிங்கு
இயங்காது உண்மையடா.
தாய் கொண்ட வலிகள் மட்டும்
சில நொடிகள் இன்பமடா.
வலித்தாலும் வலித்திடுமே
அது தானே வாழ்க்கையடா

பூக்கள் கொஞ்சம் வலிகள் கொண்டால்
பூவாசம் வீசுமடா.
இரு தோள்கள் தன்னில் வலிகள் கொண்டால்
உன் வாழ்வில் இன்பமடா.
வேர் கொண்ட மரம் தாங்க
தரை மடிக்கு வலிக்குமடா.
இருந்தாலும் வெயிலினிலே - நிழல்
தரும் போது சுகம்டா.
வலிகளை நீ வலிகளை நீ
வெறுத்திட நினைக்காதே
வெறுப்பதனால் வலிகளொன்றும்
தென்றல் வீசாதே.
தாங்கிக் கொள்ளும் இதயம் தான்
போராடும் நிற்காதே.!

முட்கள் மீது நடந்து பழகினால்
ரத்தம் எட்டி பார்த்திடுமே.
மீண்டும் மீண்டும் நடந்து பாரடா
ரத்தம் சிந்த பயந்திடுமே.!
துயரம் தன்னில் சிரித்தால் - உன்னை
துயரம் விட்டு ஓடிடுமே.
துயரம் விரைவாய் மறைந்து விட்டு
இன்பம் நாடி வந்திடுமே.!
கவலைகளை கைக்கழுவ
நினைத்தால் முடிவதில்லை.
கைக் கழுவி பார்த்து விடு
அது உன்னை நினைப்பதில்லை!

பிரிவுகள் நிரந்தரம்

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன்
என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்

நாளை
சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்

எல்லாம்
முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

எவ்வளவோ
முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்


நான் பேசிய
வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்

நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து
போகலாம்

உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்

இந்த
உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள்
என்னில்
என்றும் உயிர் வாழ்ந்துகொண்டேயிருக்கும்..

இவன்
பிரிவுகள் நிரந்தரம்
(-பிரதீஸ் -)

எதிர்பார்ப்பு!!!!!!!!!!!!!!

என் இதயத்தில் முதல் முதலாக
இடம் பிடித்த என் காதலியே
அன்பே எனக்கும்
முதல் முதலாக
பிடித்தது உன் அன்புதான்
அந்த அன்பில் தான்
நான் என்
இதயத்தை
உன்னிடம்
கொடுதது விடடேன்
ஆனால்
இப்போதுதான் புரிகிறது
என் வாழ்க்கையில்
மனைவி என்று
எழுத்து இருந்தால்
அது நீயாகத் தான் இருக்கனும்
என்று எதிர்பார்க்கின்றேன்
நீ எனக்கு
கிடைக்க மாட்டாய்
என்றால் என் மூச்சு
அந்த நேரமே
நின்று விடும்
அது நிச்சயம்
அன்பே நான்
இருக்கும் வரை
உனக்காக என் இதயம்
எந்நேரமும்
திறந்து இருக்கும்
அன்பே!!!!!!!!!!!!!!!!!

நிஐமான காதல்

காதலிக்கத் தெரிந்த
உனக்கு
காதலைச் சொல்ல
துணிவில்லை..................
கண்களால் பார்க்கத் தெரிந்த
உனக்கு
பேசுவதற்கு வார்த்தைகள்
தெரியவில்லை.......................
மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதின் விருப்பத்தை
அறிய முடியவில்லை...........
அதனால் தான்
கேட்கின்றேன்
நீ என்னைக் காதலித்தது
நிஐம் தானா???
நிஐமென நம்பி வாழ்ந்த
நான் இன்று
உன் நிழலைத் தேடி
அலைகிறேன்...........
ஏனெனில்
நான் உன் மேல்
கொண்டது
நிஐமான காதல்!!!!

உனக்கு மட்டும் தான்

அழகியே எனதன்பே.............
பூப் போன்ற முகமழுகு
உனக்கு மட்டும் தான்
பால் போன்ற உடலழுகு
உனக்கு மட்டும் தான்
நிலா போன்ற உடலழுகு
உனக்கு மட்டும் தான்
நதி போன்ற சிரிப்பழுகு
உனக்கு மட்டும் தான்

குடை போன்ற குணயழுகு
உனக்கு மட்டும் தான்
உடை போன்ற இமையழகு
உனக்கு மட்டும் தான்
ஏ-9 பாதை போன்ற ழூக்கழகு
உனக்கு மட்டும் தான்
ஏகே 47 கண் போன்ற விழியழகு
உனக்கு மட்டும் தான்

ழூச்சு போன்ற பாதமழகு
உனக்கு மட்டும் தான்
பேச்சு போன்ற குரலழகு
உனக்கு மட்டும் தான்
நீர் போன்ற இரக்கமழகு
உனக்கு மட்டும் தான்
நீர் குமிழி போன்ற பருவமழகு
உனக்கு மட்டும் தான்

பிரம்மன் படைப்பில்
இப்புவியில்
நீ
மட்டும் தான்................

மனம்

நேற்று போல்
இன்று இல்லை
இன்று போல்
எதுவும் இல்லை
உனக்கு எதிர்
நான் இல்லை
உன் போல் வேறு
யாரும் இல்லை
அதனால் என் மனம்
இங்கு இல்லை
இப்போ
எங்கே என
கேட்கிறாயா!!!!!!!!!!
அதை
சொல்லும்
பக்குவம்
நிச்சயமாக
எனக்கு
இல்லை.....

viruppam

விருப்பமனாவர்களுக்காக
விருப்பமில்லாததை
விருப்பத்துடன் செய்கிறவனின்
விருப்பத்தை
விருப்பமனாவர்கள்
விரும்புவதில்லை

கவிதைத் திருவிழா!

என் இதயக் கோவிலில்...
இன்று கவிதைத் திருவிழா!
கற்ச்சிலையாய் அமர்ந்திருக்கும் என்...
காதலியின் முகம் மலர!
அன்புச் சொல் கொண்டு!
அழகுத் தமிழில்...
நான் எழுதும் இந்தக் கவிதை...
என்னவளுக்குத் திருவிழா...rvm!

கல்லறை,,,,,

சிந்திக்கவில்லை
என்
காதலி
கல்லறைக்கு
வருவாள் என்று....

சிந்தித்திருந்தால்
வந்திருக்க
மாட்டேன் "கல்லறைக்கு".......

புதியவன்.மு

விலங்குகள்

விலங்குகளின் மீது
அன்பு காட்டும்
பெண்ணை
காதலித்தது தவறு என்று
இன்றுதான் உணர்ந்துகொண்டேன்...

விலங்குகளின்
புத்திதானே
அவளுக்கும் இருக்குமென்று...


புதியவன்.மு

பெருமைகள்

பிரியும் போது தெரியும்
"நட்பின்" பெருமை...
பிரிந்து விட்டால் தெரியாது
"காதலின்" பெருமை...

புதியவன்.மு

சூரியன்

சூரியன்
இன்று
வானில் வலம் வரவில்லையாம்...

காரணம்

என்
காதலி
கோபபட்டாலாம்....

புதியவன்.மு

ஸ்ரீதேவி...

பட்டுடுத்தி வரும் பெண்ணை
ஸ்ரீதேவி என்றும்...

அதே
பெண்
வெள்ளை உடுத்தி வந்தால்
மூதேவி
என்கிறதே இவ்வுலகம்....

தூக்கத்தை வெறுக்கிறாள்

என்
காதலி
தூக்கத்தை
கூட
வெறுக்கிறாள்...

நான்
கனவில்
வந்துவிடுவேன்
என்ற பயத்தில்...

புதியவன்.மு

Post a Comment (0)
Previous Post Next Post