Sugamanathu - Karunai - Nijam

Sugamanathu

சுற்றங்கள்
அவஸ்தை தான்
ஆனால்
சுகமானது

வறுமை
அவஸ்தை தான்
ஆனால்
சுகமானது

பிரிவு
அவஸ்தை தான்
ஆனால்
சுகமானது

கர்ப்பம்
அவஸ்தை தான்
ஆனால்
சுகமானது

பெண்ணே உன் நேசம்
அவஸ்தை என்று
நீ சொன்னாலும்
அது சுகமானது தான்

Karunai

கருணை

உன்னை
காணாமல்
காய்ந்து
போன
என் இதயத்தை
நனைக்க
கருணை
கொண்டு
பொழிகின்றன
இந்த மேகங்கள்....

ஆனால்
உனக்கு தான்
கருணை இல்லை
என்மீது

Nijam

கனவுகளும்
அல்ல
காவியமும்
அல்ல
வாழ்க்கை.....

நினைவுகளின்
தொகுப்பும்
நிஜங்களின்
நிறைவும் தான்
வாழ்க்கை....

Pooripu

புலரும்
காலை பொழுதின்
பூங்குயில் ராகம் போல்

புது மழை
பூமியில் பட்டவுடன்
புரண்டு வரும்
மண் வாசம் போல்

தென்றலோடு
தவழ்ந்து வந்து
தழுவி விட்டு போகும்
பூவாசம் போல்

பெண்ணே
உன் பூவிழி
பார்வை பட்டவுடன்
பூரித்து போகுதே
எந்தன் உள்ளம்

காலை வணக்கங்கள்
என் கவிக் கண்ணே

Ithayam

உன் புன்னகை
தேசத்திற்கு
நேற்று
விடுமுறையா?
இன்றாவது
ஒரு விசா கொடு
அதை தரிசிக்க......

உன் விழிகள்
என்னை காண்பதற்கு
கதவடைப்பா
நேற்று?
உன்
விழிகளின் திரைகள்
இன்றாவது
திறக்கப்படுமா
எனக்காக........

ஏங்கி தவிப்பது
நான்
மட்டுமல்ல
என் இதயமும் தான்

IRANTHU VITTEN..!

நீ
என் மீது
அளவுக்கு அதிகமான
கோபத்தை காட்டி
மன்னித்து விடு ...!
என்று சொன்னாய்
அதை
அந்த இடத்திலயே
நான்
மறந்து விட்டேன் ...!
நீ
என் மீது
அளவுக்கு அதிகமான
அன்பை காட்டி
என்னை
மறந்து விடு ...!
என்று சொன்னாய்
அந்த இடத்திலயே
நான்
இறந்து விட்டேன் ...!

VANURNTHA SOLAI...!

வானுயர்ந்த
சோலை...!
நடுவே
சாலை..!
நடுவே
சேலை...!
உடுத்தி
செல்லும்
செல்லமே...!
உன்னை காண
நடு ராத்திரி
வேலை...!
நடுநடுக்கும்
பனி மேலே..!
நடந்தேன்
விடியாத
இந்த காலை..!
என்று

PRITHU VIDU...!

அன்னப்பறவை இடத்து
தண்ணீரும்,பாலும்
கலந்து
வைத்தால்
தனி தனியே
பிரித்து விடுமாம்..!
என்னிலே
கலந்து விட்ட
உன்னை
பிரித்து பார்க்க
நினைப்பு கூட
வரவில்லை ..!
ஆனால்..!
நீ
கூறி விட்டாயே
ஒற்றை வரியில்
"பிரித்து விடு "
என்னை
உன்னில் இருந்து
என்று ...!

NILA INDRU IRATTAI VEDAM...!

அடர்ந்த காடு
அழகிய சிறு மேடு
வழிகிறது
நீரோடை ..!
வழிகிறேன்
நன்
உன்னை பார்த்து ...!
நீர் போல ..!
இன்று நிலா
இரட்டை வேடம்
வானில் ஒன்று...!
என்
எதிரில் ஒன்று...!

தனிமை

எத்தனையோ உறவுகள்...
என்னை சுற்றி!!!!

எத்தனையோ இரவுகள்...
யாரும் இன்றி!!!

ஏனோ நீ இல்லாதது மட்டும்
என்னையும் சேர்த்து நான்
உன்னிடம் தொலைந்ததை
உணர்த்துகிறது...

தனிமையின் வெறுமையை...!
தவிப்பின் வேண்டுதலை ....!

kathalil natpu

முத்து புதியவன்

kathal

காதலித்த பெண்
என்னை...
கைவிட்டுவிட்டால்
ஆனால்
நீ....
என்னை கைவிடவில்லை
காதலனே......!

kathal

பகலில்
சூரியனை
நான்
பார்க்க
மறந்தாலும்.....

இரவில்
நிலவாகிய
உன்னை
பார்க்க
மறப்பதில்லை.....

"என்ன கனவில்"

நட்பு

நீயும் நானும்
கைகோர்த்து நடந்தால் அதை
காதல் என்று சொல்லும்
இந்த சமுதாயத்திற்கு
என்ன தெரியும்
நீயும் நானும்
நட்பு என்னும் ஒரு
தாய் வயிற்று
பிள்ளைகள் என்று,,,,,,

அன்பும் அரவணைப்பும்

உனக்கு பிடித்தவர்களின்
பிடித்தவற்றை
உனக்கு பிடித்ததாக
மாற்றிக் கொல்-வதைவிட
அவற்றை ரசிக்கத்
தெரிந்தவனாக இரு
உன் அன்பார்ந்தவர்களின்
துன்பத்திலும்
உன் அன்பும் அரவணைப்பும்
அவர்களுக்கு துணைபோகும்.
உன் உயிர் பிரிந்தாலும்

புரிந்துகொள்ளுங்கள்

பெற்றவர்கள் சொல்லி
புரியாதது
எல்லாம்,
ஒருநாள்...
வாழ்க்கை
புரியவைக்கும்

அப்பொழுதில்
புரிந்து கொண்டால்
காலம் கடந்தது மட்டும்
அல்லாமல்
வலிக்கவும் செய்யும்,

அந்த தருணத்திலும் உன்னை
தாங்கிபிடிக்கபோவது
உன் முதல்
நலம் விரும்பி
பெற்றோர்கள் தான்
புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே

பெண் சிசுகொலை!

பெண் சிசுகொலைகள் குறைந்துவிட்டன
ஆம் எல்லாம்.......
பெண் சிசு கருகலைப்பு
ஆனதால்!!!!

Vaan Nila

வான் நிலா

எனக்கு பிடித்த
எல்லாமே
தொலைவில் தான்
தொட முடியாத
உயரத்தில் தான்

நீல வானமும்
நிலவும்
ஏன்
நீயும் கூட...

ஓற்றுமை இல்லம் ,,

இங்கு சாதி, மத வேறுபாடுகள் இல்லை
என்றதும் உள்ளே சென்றேன்
ஆனதை இல்லம்
இங்கு மட்டும் தான்
சாதி, மதம் வேறுபாடுகள் இல்லை
இந்த உலகத்தில்
ஓற்றுமையை கற்றுதரகூடிய
ஒரே இடம் ஆனதை இல்லம்
இல்லை இல்லை
ஓற்றுமை இல்லம்
என்பதே பொருந்தும்

காகிதம்...!

காகிததில் கப்பல் செய்து கொடுதேன்...
அதை தண்ணீரில் விட்டு அழகு பார்தாய்!
காகிததில் பட்டம் செய்து கொடுதேன்...
அதை காற்றில் விட்டு ஆனந்தப்பட்டாய்!
அதே காகிதத்தில்தான் என் காதலையும் சொன்னேன்...
அதைமட்டும்மேன் கசக்கி எரிந்து எனை காயப்படுதினாய்...rvm?

Post a Comment (0)
Previous Post Next Post